Tuesday, March 13, 2018

108 - பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில்

பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று
எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையன்
இல்லாதோம் கைப்பொருளு மெய்துவானொத்துளனே

பொல்லாக் குறள் உருவாய்ப் பொற்கையில் நீர் ஏற்று - பொல்லாச் சிறிய உருவாக தன் பொன்னான கையில் நீர் ஏற்று

எல்லா உலகும் அளந்து கொண்ட எம் பெருமான் - எல்லா உலகங்களையும் கொண்ட எம்பெருமான்

நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையன் - நல்லவர்கள் வாழும் பெருமை மிக்க நாகத்தினை அணைத்த அரங்கன்

இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே - இல்லாதவர்களிடம்  இருந்து அவர்களின் கைப்பொருள்களையும் கவருவான் போல இருக்கிறான்

பொல்லாச் சிறிய உருவாக தன் பொன்னான கையில் நீர் ஏற்று, எல்லா உலகங்களையும் கொண்ட எம்பெருமான், நலல்வர்கள் வாழும் பெருமை மிக்க நாடத்தினை அணைத்த அரங்கன்,இல்லாதவர்களிடம் இருந்து அவர்களின் கைப்பொருளையும் கவருவான் போல இருக்கிறான்

(மாவலியிடம் இருந்து சிறிய உருவில் உலகங்களை அபகரித்தவன், அதேபோல இல்லாத என்னிடம்  இருந்து, என் மனத்தை அபகரித்தான்.அவனையே எண்ணி எண்ணி மெலிந்த  என் வளையல்களை அபகரித்தான்.)

No comments:

Post a Comment