Sunday, March 11, 2018

96- கோவை மணாட்டி

கோவை மணாட்டி! நீயுன்
கொழுங்கனி கொண்டு எம்மை
ஆவி தொலைவியேல் வாயழ
கர்தம்மை யஞ்சுதும்
பாவி யேந்தோன்றிப் பாம்பணை
யார்க்கும்தம் பாம்புபோல்
நாவு மிரண்டுள வாய்த்து
நாணிலி யேனுக்கே

கோவை மணாட்டி நீயுன் கொழுங்கனி கொண்டு- கோவை மணாட்டியே!நீ உன் சிவந்த கொழுங்கனிகளைக் கொண்டு

எம்மை ஆவி தொலைவியேல் -என் ஆவியைத் தொலைக்காதே

வாய் அழகர் தம்மை அஞ்சுதும் பாவியேன் தோன்றி-வாய் அழகானவரின் சிவந்த அதரங்களை நினைவூட்டுகின்றன.பாவியாகிய நான் பிறந்து

பாம்பணையார்க்கும் தம் பாம்பு போல்-பாம்பினைப் படுக்கையாகக் கொண்டவனுக்குதனது பாம்பினைப் போல

நாவும் இரண்டு உள  வாய்த்து-இரட்டை நாக்கு வாய்த்துவிட்டது போல

நாணிலி யேனுக்கே- ஆனாலும் இன்னமும் அவனையே நினைத்துக் கொண்டு வெட்கமற்றுப் போனேனே!

கோவைக்கொடியே! நீ உன் சிவந்த திரண்ட கனிகளைக் கொண்டு என் உயிரை வாங்காதே!அவை,வாய் அழகரின் சிவந்த அதரங்களைப் போலத் தோன்றி அச்சுறுத்துகின்றன.
நான் அவனை சேரமுடியாத பாவியாகிப் பிறந்தேன்.பாம்பினைப் படுக்கையாகிக் கொண்டவனுக்கு, அந்தப் பாம்பினைப் போல இரட்டை நாக்குப் போல.(என்னை சேருவதாய் சொல்லிவிட்டு, இதுவரை மௌனம் ஏன்).நான் மட்டும் இன்னமும் அவனையே நினைத்துக் கொண்டு வெட்கமற்றுப் போனேனே!

No comments:

Post a Comment