Monday, March 19, 2018

127 - ஆரே யுலகத் தாற்றுவார்

ஆரே யுலகத் தாற்றுவார்
ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
காரே றுழக்க வழக்குண்டு
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆரா வமுத மனையான்றன்
அமுத வாயிலூறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே
பருக்கி யிளைப்பை நீக்கீரே

ஆரே உலகத்து ஆற்றுவார் - இந்த உலகத்தில் யார் என்னை ஆற்றுவார்கள்

ஆயர் பாடி கவர்ந்து உண்ணும் - ஆயர் பாடி முழுவதும் கவர்ந்து,அவர் மனம் கொள்ளை கொண்டிருக்கும்

காரேறுழக்க வழக்குண்டு - கரிய நிறத்துக் காளை என்னை வருத்த, அதனால் வருந்தி கொண்டு

தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை - தளர்ந்தும் முறிந்தும் கிடப்பவளை

ஆராவமுத மனையாறான் - என்னவன் ஆராவமுதனின்

அமுத வாயில் ஊறிய நீர் தான் கொணர்ந்து புலராமே - அமுத வாயில் ஊறிய நீரினை கொண்டு வந்து நான் தெளிய

பருக்கி இளைப்பை நீக்கீரே - அதைப் பருகத் துணை புரிந்து என் இளைப்பைப் போக்குங்களேன்

ஆயர்பாடி முழுதும் கவர்ந்து,கரிய நிறத்துக் காளை, அவர் மனம் கொள்ளைக் கொண்டிருக்கும் , தளர்ந்து, முறிந்தும் கிடக்கும் என்னை இவ்வுலகில் ஆற்றுவார் யாரும் இல்லையே!என்னவன் ஆராவமுதனின், அமுத வாயில் ஊறிய நீரினை கொணர்ந்து நான் தெளிய எனக்குக் கொடுத்து எனது இளைப்பைப் போக்குங்களேன் 

No comments:

Post a Comment