Tuesday, March 20, 2018

133 - அல்லல் விளைவித்த பெருமானை

அல்லல் விளைவித்த பெருமானை
ஆயர் பாடிக் கணிவிளக்கை
வில்லி புதுவை நகர்நம்பி
விட்டு சித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள்
வேட்கை யுற்று மிகவிரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள்
துன்பக் கடலுள் துவளாரே

அல்லல் விளைவித்த பெருமானை - துன்பம் கொடுத்த பெருமானை

ஆயர் பாடிக் கணிவிளக்கை - ஆயர்பாடியின் அழகான விளக்கை


வில்லி புதுவை நகர் நம்பி விட்டு சித்த்ன் வியன் கோதை - வில்லிப்புத்தூர் நகர நம்பி விஷ்ணுசித்தன் எனும் பெரியாழ்வாரால் பெருமைப் பெற்ற கோதை

வில்லைத் தொலைத்த புருவத்தாள் - தன் வேதனையால் வில்லைனைப் போன்ற புருவ அழகைத் தொலைத்தவள்

வேட்கையுற்று மிக விரும்பும் - வேட்கைக் கொண்டு மிகவும் விரும்பும்

சொல்லைத் துதிக்க வல்லார்கள் - சொல்லை (பாடலை) பாட வல்லவர்கள்

துன்பக் கடலுள் துவளாரே - துன்பம் எனும் கடலில் துவள மாட்டார்கள்

(கோதைக்கு ) துன்பம் அளித்த பெருமான், ஆயர்பாடியின் அழகான விளக்கு, வில்லிப்புத்தூர் விஷ்ணு  சித்தன் பெரியாழ்வாரின் மகள்
  கோதை விரும்பும் அழகன், அவன் நினைவால் தன் வில்லைப் போன்ற புருவ அழகைத் தொலைத்தவள் பாடிய பாடல்களை பாடுபவர்கள் (திருமாலின் மீதான பாடல்கள்) துன்பம் எனும் கடலில் துவள மாட்டார்கள்

பதின்மூன்றாம் பத்து முடிவுற்றது)

No comments:

Post a Comment