Monday, March 5, 2018

76-ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோ டிவையெல்லாம்

ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோ டிவையெல்லாம்
எளிமையா விட்டென்னை ஈடழியப் போயினவால்
குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடி
அளியத்த மேகங்காள் ஆவிகாத் திருப்பேனே

ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோடு இவையெல்லாம்- மிகுந்த ஒளியும், வளையல்களும், சிந்தனைகளும்,உறக்கமும் இவையெல்லாம்
எளிமையா விட்டேன்னை ஈடழியப் போயினவால்-நான் எளிமையானதில் என்னை விட்டு நீங்கின
குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடி -குளிர்ந்த நீர் கொண்ட அருவி வேங்கடமலை என் கோவிந்தன் குணம்பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்திருப்பேனே-அருள் செய்யும் மேகங்களே!என் உயிர் காத்து நிற்பேனே

(எனது) ஒளி மிகுந்ததேகம்  ஒளி இழந்துவிட்டது.நல்ல நிற த்தில் இருந்த உடலில் பசலை நோய் பரவ ஆரம்பித்துவிட்டது.ஊன் ,உறக்கம் இல்லாததால் உடல் மெலிந்து , அணிந்திருந்த வளையல்கள் கழண்டன.எப்போதும், கண்ணனைப் பற்றியே சிந்தனை.குளிர்ந்த அருவி கொண்ட வேங்கடத்தான்,என் கோவிந்தனின் நற்குணங்களைப் பாடி,தகித்திருந்த என் உடலும், அதன் வெளிப்பாடான கண்ணீரையும் குளிர்விக்கும் மேகங்களே!என் உயிரை அவருக்காக இருக்கிப் பிடித்து வைத்திருப்பேனே!

No comments:

Post a Comment