Thursday, March 15, 2018

113 - செம்மை யுடைய திருவரங்கர்

செம்மையுடைய திருவரங்கர் தாம்பணித்த
மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பர்
தம்மை யுகைப்பாரைத் தாமுகப்ப ரென்னும்சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பா ராரினியே

செம்மை உடைய திருவரங்கர் - சிறப்பையுடைய திருவரங்கர்

தாம் பணித்த மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பர்- கட்டளையிட்ட உண்மைப் பெரும் பொருளை பெரியாழ்வார் விஷ்ணுசித்தர் கேட்டிருப்பர்

தம்மை உகப்பாரைத் தாமுகப்பர் என்னும் சொல் - தம்மை விரும்புபவரை தாமும் விரும்புவர் எனும் சொல்

தம்மிடையே பொய்யானால் சாதிப்பா ராரினியே - காப்பாற்றப் படாமல் ,அவ்விறைவனானாலேயே பொய் ஆகிப் போனால், இனி யார் தான் சாதிக்க முடியும்?

(பெரியாழ்வாரின் திருமொழி- ஓம் நமோ நாராயணாய
ஓம் என்பது இங்கு ஒரு எழுத்தாகக் கொள்ள வேண்டும்
ஓம்- அவனுக்கும் எனக்குமான உறவு(உயிர்களுக்கும், இறைவனுக்குமான உறவு)
நமோ- எதுவும் எனதில்லை
நாராயணாய-என் எல்லாமும் நாராயணுக்கே
(அரங்கனால் நான்-அரங்கனுக்காக நான்)

சிறப்பையுடைய திருவரங்கர், கட்டளையிட்ட உண்மைப் பெரும் பொருளை பெரியாழ்வார் விஷ்ணுசித்தர் கேட்டிருப்பார்.தம்மை விரும்புபவரை தாமும் விரும்புவர்(ஓம்)
அந்த சொல் காப்பாற்றப்படாமல், பொய் ஆக ஆகிப்போனால், இனி யாரால் அதை சாதிக்க முடியும்.
(தான் விரும்புன் திருவரங்கண் இன்னமும் தன்னை விரும்புவதாகத் தெரியவில்லையே என்ற ஆதங்கத்தில் கோதை கேட்கிறாள்)

இத்துடன் பதினோராம் பத்து முடிவுற்றது

No comments:

Post a Comment