Tuesday, March 13, 2018

107- மச்சணி மாடமதிளரங்கர் வாமனனார்

மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்
பச்சைப் பசுந்தேர் தாம்பண்டு நீரேற்ற
பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல்
இச்சை யுடையரே லித்தெருவே போதாரே

மச்சு அணி மாட மதிள அரங்கர் வாமனனார்- மாடியும், அழகான மாடங்களும், மதில்களும் உடைய திருவரங்கம் உள்ள வாமனனார்

பச்சைப் பசுந்தேர்தாம்பண்டு நீர் ஏற்ற- பச்சை நிறத்தையுடையவர், தாம் முன்பு நீர் வார்த்து புவி பெற்ற போதிலும்

பிச்சைக் குறையாகி என்னுடைய பெய்வளைமேல்- பிச்சையில் என்ன குறை மிச்சம் இருந்ததோ என்னுடைய பெய்வளை மீது

இச்சையுடையரேல் இத்தெருவே போதாரே- ஆசை உள்ளவர் போல இத்தெருவிற்கு வருவாரோ!

அழகான மாடங்களும், மதில்களும் உள்ல திருவரங்கம் உள்ள வாமனனார், பச்சை நிறத்தவர்,தாம் முன்பு வாமன அவதாரம் எடுத்த போது,ஓங்கி உலகளந்த  போது நீர் பெற்று (மாவலியால் தாரைவார்க்கப்பட்டு) புவியைப் பெற்றார்.
அந்தப் பிச்சியிலும் இன்னமும் குறையிருக்கிறது போலும்.என்னுடைய பெய்வளைமீது ஆசைப்பட்டு இத்தெருவிற்கு வருவாரோ!

No comments:

Post a Comment