Saturday, March 10, 2018

93- சந்தொடு காரகிலும் சுமந்து வண்டுக

சந்தோடு காரகிலும் சுமந்து தடங்கள்பொருது.
வந்திழி யும்சிலம்பா றுடைமாலிருஞ் சோலைநின்ற
சுந்தரனை கரும்பார் குழல்கோதை தொகுத்துரைத்த
செந்தமிழ் பத்தும்வல்லார் திருமாலடி சேர்வர்களே

சந்தொடு காரகிலும் சுமந்து தடங்கள் பொருது-சந்தன மரங்களோடு காரகில் மரங்களும் சுமந்து

வந்தழியும் சிலம்பாரு உடை மாலிருஞ்சோலை நின்ற- வந்து, வழிகளை அழித்துக் கொண்டு பாயும் சிலம்பாறு உடைய, மால் இருஞ்சோலை நின்ற

சுந்தரனை கரும்பு ஆர் குழல் கோதை தொகுத்துரைத்த-சுந்தரப் பெருமானை வண்டுகள் ஆர்க்கும் மலர்களை சூடிய கூந்தலையுடைய கோதை தொகுத்து உரைத்த

செந்தமிழ் பத்தும் வல்லார் திருமால் அடி சேர்வர்களே-செந்தமிழ்ப் பாடல்கள் பத்தும் பாட வல்லவர்கள் ., திருமாலின் பாதங்களை அடைவர்

சந்தன மரங்களோடு, கார்கில் மரங்களும் சுமந்து ஒடி, வழிகளை அழித்து பாயும் சிலம்பாறு உடைய திருமாலிருஞ்சோலையில் நின்ற சுந்தரப் பெருமானை, வண்டுகள் சுற்றிக் கோண்டிருக்கும் மலர்களை சூடிய  கூந்தலையுடைய கோதை பாடிய இப்பத்து பாடல்களையும் பாட வல்லவர்கள் . திருமாலின் பாதக்கமலத்தை அடைவர்

(ஒன்பதாம் பத்து இத்துடன் முடிவுற்றது)

No comments:

Post a Comment