Wednesday, March 21, 2018

134 - பட்டி மேய்ந்ததோர் காரேறு

(பதினான்காம் பத்து ஆரம்பம்)
கடைசி பத்து.திருமாலின் அவதாரங்களை கோதை புகழ்ந்தாலும், அவள் மனம் நாடுவதோ கண்ணனை.
இப்பத்துப் பாடல்களில், அவள் கண்ணனியப் பார்த்தீர்களா? எனக்கேட்பது போலவும்..அப்படி கேட்கப்பட்டவர்கள் பார்த்ததாகக் கூறுவது போலவும் பாடல்கள் அமைந்துள்ளன.
ஆனாலும், ஆண்டாள் இறுதிவரை அவனைப் பார்த்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.அவள் மனம் தவிப்புடனேயே இருந்திருக்கிறாள்.
ஆனாலும், நமக்கு அவளை, பெருமாளிடம் இருந்து பிரித்து அறியமுடியவில்லை

இனி கடைசி பத்துப் பாடல்களைக் காணலாம்..

பட்டி மேய்ந்ததோர் காரேறு
பலதே வர்கோர் கீழ்க்கன்றாய்
இட்டீ றிட்டு விளையாடி
இங்கே போதக் கண்டீரே
இட்ட மான பசுக்களை
இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே

பட்டி மேய்ந்ததோர் காரேறு - தொழுவத்தில் மேய்ந்த ஒரு கருங்காளை

பலதேவர்க்கு ஓர் கீழ்க்கன்றாய் - பலதேவருக்கு ஒரு நல்ல தம்பியாய்

இட்டீறிட்டு விளையாடி - செருக்குடன் விளையாடு

இங்கே போதக் கண்டீரே - இங்கே வரக் கண்டீர்களா?

இட்டமான பசுக்களை - தனக்கு விருப்பமான பசுக்களை

இனிது மறித்து நீரூட்டி - இனிமையாகப் பேசி, தடுத்து, அவற்றிற்கு நீரூட்டி

விட்டுக் கொண்டு விளையாட - மேய விட்டுக் கொண்டு விளையாட

விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்திலே நாங்கல் கண்டோம்

கேள்வி - தொழுவத்தில் மேய்ந்த ஒரு கருங்காளை, பலதேவரின் நல்ல த்ம்பியாய், செருக்குடன் (சற்றே மிதப்பௌடன்) விளையாடி இங்கே வரக் கண்டீர்களா?

பதில்- தனக்கு விருப்பமான பசுக்களை, மேயச் செல்லும் போது, நிறுத்தி, அவற்றிற்கு நீர் வைத்து,பின் மேய்விட்டு அவன் விளையாடுவதைக் கண்டோம்

No comments:

Post a Comment