Friday, March 2, 2018

65- கடலில்பி றந்துக ருதாது பஞ்சசனன்

கடலில்பி றந்துக ருதாது பஞ்சசனன்
உடலில்வ ளர்ந்துபோ யூழியான் கைத்தலத்
திடரில்கு டியேறித் தீயவசுரர் நடலைப்ப
டமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே

கடலில் பிறந்து கருதாது- சங்கே! நீ கடலில் பிறந்தாய்,பிறந்த இடத்தையும் மறைந்தாய்
பஞ்சசனன் உடலில் வளர்ந்து போயூழியான் கைத்தலத்-பஞ்சசசன் உடலிலே வளர்ந்தாய்,இறுதியால் ஊழியான் கைத்தலத்தில்
இடரில் குடியேறித் தீய அசுரர் நடலைப்பட-தீமைசெய்யும் அசுரர் நடுநடுங்க துன்பப்படும்படி
நடலைப்பட முழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே-முழங்கும் தோற்றமுடையவன் ஆனாய் சங்கே

அன்பின் நற்சங்கே! நீ பிறந்ததோ கடலில்.வளர்ந்ததோ பஞ்சசனன் எனும் அரக்கன் உடம்பில்.ஆனால், பிறந்து, வளர்ந்த இடத்தை மறந்துவிட்டு,ஆழிமறைக் கண்ணன், அந்த ஊழியானின் கைத்தலத்தில் குடியேறிக்கொண்டு, தீமை செய்யும் அசுரர் நடுநடுங்கத் துன்பம் வரும்படி முழங்கும் மேன்மை பெற்ற தோற்றமுடையவன்ஆனாய்.எப்படிப்பட்ட மேன்மையான சங்கு இது.

No comments:

Post a Comment