Thursday, March 8, 2018

85- போர்களி றுபொரும்மா லிருஞ்சோலையம் பூம்புறவில்

போர்களிறு பொரும்மா லிருஞ்சோலை பூம்புறவில்
தார்க்கொடி  முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற
கார்க்கொள், படாக்கள்நின்று கழறிச்சிரிக் கத்திரியேன்
ஆர்க்கிடு கோதோழி அவந்தார்ச்செய்த பூசலையே

போர் களிறு பொரும் மால் இருஞ்சோலையும் பூம்புறவில்-போர் புரியும் தொழிலைக் கொண்ட யானைகள்
 இருக்கும்(திரு)மால் இருஞ்சோலை மலைச்சரிவுகளில்

தார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற- வரிசையாக உள்ள முல்லை அரும்புகள், அழகரின் வெண்மையான சிரிப்பைக் காட்டுகின்றன

கார்க்கொள், படாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் திரியேன்-அரும்புகள் கொண்ட படலம் கொடிகள் பூத்து நின்று இடித்துரைத்து சிரிக்கின்றன.இதை பொறுக்கமுடியவில்லை

ஆர்க்கிடு கோதோழி அவந்தார்ச் செய்த பூசலையே-அவன் தோள் மாலை என்னை எள்ளியதால், எனக்கும் அவற்றிற்கும் யார் அழகரின் தோள் சேர்வது என்ற உண்மையை நான் யாரிடம் சென்று முறையிடுவேன் தோழி

(புறவு- மலையும், காடும் சேரும் இடம்)

போர்புரியும் யானைகள் இருக்கும் திருமாலிருஞ்சோலையில், வாசனை கொண்ட முல்லைகளும், அரும்புகள் கொண்ட புடலம் பூக்களும் மாலையாகி, அவன் தோளை அலங்கரிக்கின்றன.அந்த முல்லை அரும்புகள் அழகரின் வெண்மையான சிரிப்பைக் காட்டுகின்றன.அந்தப் பிடவம் பூ மாலையோ, அழகரின் தோளை அலங்கரிக்கிறேன் என் கிறது..இந்தக் கோதை இருக்க வேண்டிய இடத்தில் இம்மலர்கள் அலங்கரிக்கின்றன.அவை என்னை இகழ்கின்றன.அதனால் நான் அவற்றுடன் சண்டையிடுகிறேன்...இதையெல்லாம் யாரிடம் சென்று முறையிடுவேன் தோழி. 

No comments:

Post a Comment