Thursday, March 22, 2018

141 - வெளியே சங்கொன்றுடையானைப்

வெளியே சங்கொன்றுடையானைப்
பீதக வாடை யுடையானை
அளிநன் குடைய திருமாலை
ஆழி யானைக் கண்டீரே
களிவண் டெங்கும் கலந்தாற்போல்
கழம்பூங்குழல்கள் தடந்தோள்மேல்
மிளிர நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே

வெளியே சங்கொன்று உடையானை - வெண்ணிற சங்கொன்று உடையவனை

பீதக வாடை யுடையானை - மஞ்சள் ஆடை உடுத்தியவனை

அளிநங்கு உடைய திருமாலே - இரக்கம்,அன்பு கொண்ட திருமாலை

ஆழி யானைக் கண்டீரே- சக்கரம் உடையவனைக் கண்டீரே

களி வண்டு எங்கும் கலந்தாற்போல - மகிழ்வுற்று தேனுண்டு திரியும் வண்டுகள் எங்கும் கலந்தது போல

கழம் பூங்குழல்கள் தடந்தோள் மேல் மிளிர நின்று விளையாட - மணம் கமழும் பூக்கள் அவனது பெரிய தோள்களை அலங்கரித்து மிளிர விளையாடிக் கொண்டிருப்பவனை

விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் கண்டோமே

கேள்வி - வெண்சங்கு உடையவனை, மஞ்சள் ஆடை உடுத்தியவனை,இரக்கம் அன்பு கொண்ட திருமாலை (இரக்கமில்லாவதன் என முன்னர் கூறியவள்..இப்போது இரக்கம் கொண்டவன் என் கிறாள்.ஆண்டவ்ன் மீது கொண்ட காதல்..மாறி மாறி பேசத் தோன்றுகிறது) சக்கரம் கொண்டவனைக் கண்டீர்களா?

பதில் - மகிழ்வுற்று தேனுண்டு திரியும் வண்டுகள் எங்கும் கலந்தாற்போல, மணம் கமழும் பூக்கள் அவன் தோள்களை அலங்கரிக்க விருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டிருப்பவனைக் கண்டோமே

No comments:

Post a Comment