வெளியே சங்கொன்றுடையானைப்
பீதக வாடை யுடையானை
அளிநன் குடைய திருமாலை
ஆழி யானைக் கண்டீரே
களிவண் டெங்கும் கலந்தாற்போல்
கழம்பூங்குழல்கள் தடந்தோள்மேல்
மிளிர நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே
வெளியே சங்கொன்று உடையானை - வெண்ணிற சங்கொன்று உடையவனை
பீதக வாடை யுடையானை - மஞ்சள் ஆடை உடுத்தியவனை
அளிநங்கு உடைய திருமாலே - இரக்கம்,அன்பு கொண்ட திருமாலை
ஆழி யானைக் கண்டீரே- சக்கரம் உடையவனைக் கண்டீரே
களி வண்டு எங்கும் கலந்தாற்போல - மகிழ்வுற்று தேனுண்டு திரியும் வண்டுகள் எங்கும் கலந்தது போல
கழம் பூங்குழல்கள் தடந்தோள் மேல் மிளிர நின்று விளையாட - மணம் கமழும் பூக்கள் அவனது பெரிய தோள்களை அலங்கரித்து மிளிர விளையாடிக் கொண்டிருப்பவனை
விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் கண்டோமே
கேள்வி - வெண்சங்கு உடையவனை, மஞ்சள் ஆடை உடுத்தியவனை,இரக்கம் அன்பு கொண்ட திருமாலை (இரக்கமில்லாவதன் என முன்னர் கூறியவள்..இப்போது இரக்கம் கொண்டவன் என் கிறாள்.ஆண்டவ்ன் மீது கொண்ட காதல்..மாறி மாறி பேசத் தோன்றுகிறது) சக்கரம் கொண்டவனைக் கண்டீர்களா?
பதில் - மகிழ்வுற்று தேனுண்டு திரியும் வண்டுகள் எங்கும் கலந்தாற்போல, மணம் கமழும் பூக்கள் அவன் தோள்களை அலங்கரிக்க விருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டிருப்பவனைக் கண்டோமே
பீதக வாடை யுடையானை
அளிநன் குடைய திருமாலை
ஆழி யானைக் கண்டீரே
களிவண் டெங்கும் கலந்தாற்போல்
கழம்பூங்குழல்கள் தடந்தோள்மேல்
மிளிர நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே
வெளியே சங்கொன்று உடையானை - வெண்ணிற சங்கொன்று உடையவனை
பீதக வாடை யுடையானை - மஞ்சள் ஆடை உடுத்தியவனை
அளிநங்கு உடைய திருமாலே - இரக்கம்,அன்பு கொண்ட திருமாலை
ஆழி யானைக் கண்டீரே- சக்கரம் உடையவனைக் கண்டீரே
களி வண்டு எங்கும் கலந்தாற்போல - மகிழ்வுற்று தேனுண்டு திரியும் வண்டுகள் எங்கும் கலந்தது போல
கழம் பூங்குழல்கள் தடந்தோள் மேல் மிளிர நின்று விளையாட - மணம் கமழும் பூக்கள் அவனது பெரிய தோள்களை அலங்கரித்து மிளிர விளையாடிக் கொண்டிருப்பவனை
விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் கண்டோமே
கேள்வி - வெண்சங்கு உடையவனை, மஞ்சள் ஆடை உடுத்தியவனை,இரக்கம் அன்பு கொண்ட திருமாலை (இரக்கமில்லாவதன் என முன்னர் கூறியவள்..இப்போது இரக்கம் கொண்டவன் என் கிறாள்.ஆண்டவ்ன் மீது கொண்ட காதல்..மாறி மாறி பேசத் தோன்றுகிறது) சக்கரம் கொண்டவனைக் கண்டீர்களா?
பதில் - மகிழ்வுற்று தேனுண்டு திரியும் வண்டுகள் எங்கும் கலந்தாற்போல, மணம் கமழும் பூக்கள் அவன் தோள்களை அலங்கரிக்க விருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டிருப்பவனைக் கண்டோமே
No comments:
Post a Comment