Wednesday, March 21, 2018

137 -கார்த்தண் கமலக் கண்ணென்னும்

கார்த்தண் கமலக் கண்ணென்னும்
நெடுங்கயி றுபடுத்தி என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும்
ஈசன் றன்னை கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப்
புகர்மால் யானைக் கன்றேபோல்
வேர்த்து நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே

கார்த்தண் கமலக் கண்ணன் என்னும் - கருத்த மேகத்திலே குளிர்ந்த தாமரை மலர் போன்ற கண்ணினால்

நெடுங்கயிறு படுத்தி என்னை - நீளமான கயிறைக் கொண்டு என்னைப் படுத்தி

ஈர்த்துக் கொண்டு விளையாடும் - என்னைக் கவர்ந்து கொண்டு என்னுடன் விளையாடும்

ஈசன் தன்னைக் கண்டீரே - இறைவன் தன்னைப் பார்த்தீர்களா

போர்த்த முத்தின் குப்பாய - போர்வை போர்த்தியது போல முத்துக்களால் ஆன சட்டையுடன்

புகார்மால் யானைக் கன்றே போல் - ஒளி ர்கின்ற யானைக் கன்றினைப் போல

வேர்த்து நின்று விளையாட - வேர்க்க விறு விறுக்க நின்று விளையாட

விருந்தா வனத்தே கன்டோமே - விருந்தாவனத்தில் பார்த்தோம்

கேள்வி -  கருத்த மேகத்திலே, குளிர்ந்த தாமரை மலர் போன்ற கண்களாய், என்னைக் கவர்ந்து...நீளமான கயிறினால் கட்டிப் போட்டு என்னுடன் விளையாடும் இறைவனைக் கண்டீர்களா

பதில் - ஒளிர்கின்ற யானைக் கன்றினைப் போல வியர்த்து விறுவிறுக்க , வியர்வை முத்துகள் மேயின் போர்வை போர்த்தியது போல தோன்ற விருந்தாவனத்தில் விளையாடுபவனைக் கண்டோம்

No comments:

Post a Comment