Tuesday, March 20, 2018

130 - வெற்றிக் கருள கொடியான்றன்

வெற்றிக் கருள கொடியான்றன்
மீமீ தாடா வுலகத்து
வெற்ற வெறிதே பெற்றதாய்
வேம்பே யாக வளர்த்தாளே
குற்ற மற்ற முலைதன்னைக்
குமரன் கோலப் பனைத்தோளோடு
அற்ற மற்ற மலைதீர
அணைய வழுக்கிக் கட்டீரே

வெற்றிக்கு அருள கொடியான்றன்மீ  - மேன்மை பொருந்திய வெற்றிக் கருளக் கொடியான் தன்

மீ தாடா உலகத்து - ஆணையை மீறி ஆடாத செல்ல முடியாத உலகத்து

வெற்ற வெறிதே பெற்றதாய்  வேம்பே ஆக வளர்ந்தாளே - அவனைப் பெற்ற தாய் யசோதா அவனை ஒருவனுக்கும் சிறிதும் பயனில்லா கசப்பான வேம்பாக வளர்த்தாளே

குற்ற மற்ற முலைதன்னைக் - அவனைத் தவிர வேறு எவரும் தொடமுடியாத  என் குற்றமல்லா முலைகளை

குமரன் கோலப் பனைத் தோளோடு - குமரனின் அழகிய பருத்தத் தோளுடன்

அற்ற மற்ற மலைதீர அணைய வழுக்கிக் கட்டீரே - இதுவரை அவன் தோள் சேரா குற்றம்அவை தீர நன்கு அணைத்து அமுக்கிக் கட்டுங்களேன்
(கருளைக் கொடி முல்லை மாலுக்கு உரியது )
மேன்மை பொருந்திய வெற்றிக் கருளக் கொடியானின், ஆணையை மீறி எதுவும் செல்ல முடியாத உலகத்தில், அவனைப் பெற்ற தாய் யசோதா, அவனை யாருக்கும் பயனில்லா வேம்பாய் வளர்த்து விட்டாள்.அவனுக்கே ஆன என் குற்றமில்லா முலைகளை, குமரனின் அழகிய பருத்தத் தோளுடன் நன்கு அழுத்தி அமுக்கிக் கட்டுங்கள்

(முதல் பாட்டில் அவனை பொய்யன்  எனச் சொன்னவள், இப்பாட்டில் அவன் தாய் யசோதையைக் குரை சொலிகிறாள்.இது , அவளின் வேதனையைக் குறிக்கிறது.ஆகவே கோதையின் மனதை அறிந்து//அவள் இப்படிச் சொலவதை உணர வேண்டும்.தவிர்த்து..வளர்த்த தாயைப் பெற்றதாஉ என்றும் சொல்கிறாள்.குமரன் எனமுருகனைச் சொல்வோம்.ஆனால் இப்பாட்டில் கண்ணனைகுமரன் என்றும் சொல்கிறாள்)   

No comments:

Post a Comment