Thursday, March 1, 2018

61- வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம் வந்திட்டு

வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென்னைமுன்னே நிறுத்தி
அரிமுகனச்சுதன் கைம்மேலென் கைவைத்து
பொரிமுகந் தட்டக்கனாக்கண்டேன் தோழீநான்

வரிசிலை வாள்முகத்து என் ஐ மார் தாம் வந்திட்டு-வில் போன்ற புருவமும்,ஒளி முகத்தையும் கொண்ட என் தந்தை/அண்ணன்மார்கள் வந்து
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி-தீக்குண்டத்தை நன்றாக வளர்த்து அதன் முன்னே என்னை நிறுத்தி
அரி முகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து-சிங்கமுகம் கொண்டவன் அச்சுதன் கையின் மேல் என் கையினை வைத்து
பொரி முகம் தட்டக் கனாக்கனாக்கண்டேன் தோழீ-அந்தத் தீயில் பொரியைத் தூவுவதாக கனவு கண்டேன் தோழீ 

அழகிய வில் போன்ற புருவமும்,ஒளி மிகுந்த முகத்தையும் கொண்ட என் தந்தை/அண்ணன்மார் வந்து அமர்ந்து, தீக்குண்டத்தை நங்கு வளர்த்து,அதன் முன்னே என்னை நிறுத்தி, சிங்க முகன் அச்சுதன் கையின் மேல் என் கையை வைத்து .அந்தத் தீயில் பொரியைத் தூவுவதாகக் கனாக் கண்டேன் தோழீ

No comments:

Post a Comment