Thursday, March 22, 2018

140 - பொருத்த முடைய நம்பியை

பொருத்த முடைய நம்பியைப்
புறம்போ லுள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக்
கருமா முகிலைக் கண்டீரே
அருத்தித் தாரா கணங்களால்
ஆரப் பெருகு வானம்போல்
விருத்தம் பெரிதாய் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே

பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை - உள்ளும் புறமும் ஒன்றாய்ப் பொருந்திய நம்பியை, உடல் போல உள்ளமும் கருப்பானவனை

கருத்தைப் பிழைத்து நின்ற அக் கரு மாமுகிலைக் கண்டீரே- தான் சொன்ன வாக்கை நிறைவேற்றாத அந்தக் கரிய நிற முகில் நிறத்தவனைக் கண்டீர்களா

அருத்தித் தாரா கணங்களால் - அருந்ததி முதலான விண்மீன் கூட்டங்களால்

ஆரப் பெருகு வானம் போல்- நிறைந்து வழியும் வானத்தைப் போல

விருத்தம் பெரிதாய் வருவானை - பெரிய கூட்டத்துடன் வருபவனை

விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவத்தில் கண்டோம்

(ஆண்டாளின் மனநிலையைப் பாருங்கள்.இவள்..கற்பனை உலகில் அவனுடன் வாழ்ந்தாள்.ஆனால்..அவன் வராததால் கொடுத்த வாக்கைக் காப்பாற்றாதவன் என் கிறாள்.உள்ளும் புறமும் கருப்பானவன் என்கிறாள்/ மு ந்தைய பாட்டில் அழகற்ற புருவம் என்றாள்//இப்பாடலில் பொருத்தம் உள்ள நம்பி என் கிறாள். அவள் மனநிலையைப் பாருங்கள்.அவல் படும் வேத்னை புரியும்)

கேள்வி - தான் சொன்ன வாக்கை நிறைவேற்றாத, அந்த கரிய முகில் நிறத்தவனை, உடல் போலவே உள்ளமும் கருப்பானவனைக் கண்டீர்களா?

பதில் - அருந்ததி முதலான விண்மீன் கூட்டங்கள் நிறைந்த வானம் போல..த்ன்னை சுற்றிக் கூட்டத்துடன் விருந்தாவனத்தில் அவன் வருவதைக் கண்டோம்

No comments:

Post a Comment