Saturday, March 3, 2018

71- உண்பது சொல்லிலு லகளந்தான் வாயமுதம்

உண்பது சொல்லிலு லகளந்தான் வாயமுதம்
கண்படை கொள்ளில்க டல்வண்ணன் கைத்தலத்தே
பெண் படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே

உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்-நீ உண்பது பற்றிச் சொல்ல வேண்டுமானால், அது உலகளந்தான் வாய் அமுதம்
கண்படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே- நீ உறங்குவது பற்றி சொல்வதென்றால் அது கடல் வண்ணம் கொண்டவன் கைத்தலத்திலே
பெண்படையார் உன் மேல் பெரும் பூசல் சாற்றுகின்றனர்- (இவ்வாறு நீ செய்வதால்) பெண்கள் கூட்டம் உன் மீது பெரும் குற்றம் சாற்றுகின்றனர் (சண்டையிடுகின்றனர்)
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே-(  இந்தப் பெண்கள் அனுபவிக்க வேண்டியதை நீ ஒருவனே அனுபவிக்கிறாயாம்)பண்பில்லாததை நீ செய்கின்றாயாம் பஞ்சசன்னியமே

பன்சசன்னியமே! நீ உண்பதைப் பற்றி சொல்ல வேண்டுமாயின், அது உலகளந்தான் வாய் அமுதம்.நீ உறங்குவது பற்றி சொல்ல வேண்டுமானால்,அது கடல் வண்ணம் கொண்டவன் கைத்தலத்திலே.இப்படி சங்கே! நீ செய்வதால் பெண்கள் கூட்டம் உன்மீது குற்றம் சொல்கின்றனர்.உன்னிடம் சண்டையிடுகின்றனர்.பெண்கள் அனுபவிக்க வேண்டியதை, நீ அனுபவிப்பதன் மூலம் பண்பில்லா செயலைச் செய்கிறாயாம்.

No comments:

Post a Comment