Saturday, March 17, 2018

120 - வண்ணம் திரிவும் மனங்குழைவும்

வண்ணம் திரிவும் மனகுழைவும்
மானமி லாமையும்ன்வாய்வெளுப்பும்
உண்ண லுறாமையு முள்மெ லிவும்
ஓதநீர் வண்ணனென் பானொருவன்
தண்ணந் துழாயென்னும் மாலைகொண்டு
சூட்டத் தணியும் பிலம்பன்றன்னைப்
பண்ணழி யப்பல தேவன்வென்ற
பாண்டி வடத்தென்னை யுய்த்திடுமின்

வண்னம் திரிவும் மனகுழைவும் - என் மேனி வண்ணம் மாறியது.மனம் குழைந்து , குழப்பித் தளர்வானது

மானம் இல்லாமையும் வாய் வெளுப்பும் - மானம் போனது.சிவந்த வாய் வெளுத்துப் போனது

உண்ணல் உறாமையும் உள் மெலிவும் - உணவு பிடிக்காமல் போனது.உள்ளத்தோடு உடலும் மெலிந்து போனது

ஓதநீர் வண்னன் என்பான் ஒருவன் - அலைகள் பொங்கும் கடல்நீரின் வண்னம் கொண்ட நீலவண்ணன் எனும் ஒருவன்

தண் அம் துழாய் என்னும் மாலை கொண்டு சூட்டத் தணியும் - குளிர்ந்த அழகிய துளசிமாலை கொண்டு எனக்கு சூட்ட தணி யும் நோய்

பிலம்பன் தன்னை பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டிவடதென்னை யுத்திடுமின் - பிலம்பன் எனும் அரக்கனை அழித்து, பலதேவன் வென்ற இடமான பாண்டீரவடம் என்னும் தலத்திற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்

என் மேனி வண்ணம் மாறியது.மனம் குழைந்து, குழப்பித் தளர்வானது.மானம் போனது.சிவந்த வாய் வெளுத்துப் போனது.உணவு பிடிக்கவில்லை.உடல் மெலிந்து போனது (காதல் வியாதி பொல்லாதது).அலைகள் பொங்கும் கடல் நீரில் வண்னம் கொண்ட நீலவண்ணன். அழகிய குளிர்ந்த துளசிமாலையைக் கொண்டு எனக்கு சுட்ட தணியும் நோயும்.(தயவு செய்து) பிலம்பன் எனும் அரக்கனை அழித்து,பலதேவன் வென்ற இடமான பாண்டீரவடம் என்ற தலத்திற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்

(விருந்தாவனத்தில், காட்டில் கண்ணனும், பலராமனும் விளையாடிக் கொண்டிருந்த போது, அவர்களைக் கொல்லும் பொருட்டு பிலம்பன் அங்கு வந்தான்.அதை அறிந்த கண்ணன், பிலம்பனை விளையாட அழைத்தான்.யார் விளையாட்டில் தோற்கிறார்களோ , அவர்கள் வென்றவரை முதுகில் ஏற்றிச் செல்ல வேண்டும் என்றான் கண்ணன்.
பலராமர் வென்று விடவே, பிலம்பன் , பலராமரை முதுகில் தூக்கிச் சென்றான்.பாண்டீரவடம் என்ற இடத்திற்கு வந்த போது, பலராமர், பிலம்பனின் எலும்புகளை உடைத்துக் கொன்றார்.)
(பாண்டீரவடம் என்றால் கன்றுகள் மேயும் விளைச்சல் பகுதி என்று பொருள்)

No comments:

Post a Comment