Sunday, March 11, 2018

100- நடமாடித் தோகை விரிக்கின்ற

நடமாடித் தோகை விரிக்கின்ற
மாமயில் காள் உம்மை
நடமாட்டங்காணாப் பாவியேன்
நானோர் முதலிலேன்
குடமாடு கூத்தன் கோவிந்தன்
கோமிறை செய்துஎம்மை
உடைமாடு கொண்டானுங்களுக்
கினியொன்று போதுமே

நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில்காள்- தோகைவிரித்து நடனம் ஆடும் பெருமயில்களே

உம்மை நடமாட்டம் காணாப்பாவியேன்-உங்கள் நடனமாட்டத்தைக் காணாத பாவியாகிவிட்டேன்

நானோர் முதல் இலேன்- நான் எந்த ஒரு உடமையும் இல்லாதவள் ஆகிவிட்டேன்

குடமாடு கூத்தன் கோவிந்தன் கோம் இறை செய்து-குடம் கொண்டு ஆடியஅரசனான  கோவிந்தன் வல்லடியாககவர்ந்து

எம்மை உடைமாடு கொண்டான்-என் உடமைகளை தன் உடமைகள் ஆக்கிக் கொண்டான்

உங்களுக்கு இனி ஒன்று போதுமே-உங்கள் ஆட்டத்தை நிறுத்த இந்த ஒரு காரணம் போதுமே

(வல்லடியாக-வலிய பெற்றுக் கொள்ளுதல்)

தோகைவிரித்து அழகாக நடனம் ஆடிடும் பெருமயில்களே, உங்கள் ஆட்டத்தைக் காணமுடியா பாவியாகி விட்டேன்.(கண்ணன் வராத சோகத்தில் உள்ளேன்).கோவிந்தன் வலிய வந்து என்னிடமிருந்த உடமைகளை தன் உடமைகள் ஆக்கிக் கொண்டு விட்டான்.( எனது எல்லாம் அவனுடையது ஆகிவிட்டது.என் நிலை உங்களுக்குப் புரிந்ததா).உங்கள் ஆட்டத்தை நிறுத்தச் சொல்ல எனது இந்த ஒரு காரணம் போதாதா!

No comments:

Post a Comment