Friday, March 2, 2018

66-தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்

தடவரை யின் மீதே சரற்கால சந்திரன்
இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்நீயும்
வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ  ருஞ்சங்கே

தடவரை இன் மீதே சரற்கால சந்திரன்- பெரிதாக நின்ற மலையின் மீதே இலையுதிர்கால சந்திரன்
இடையுவாவில் வந்து எழுந்தாலெபோல் நீயும்- அந்த பெருமலைகளுக்கு இடைய்ல் வந்து எழுந்தாற்போல நீயும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்- வடமதுரை மன்னன் வாசுதேவனின் கைகளில்
குடியேறி வீற்றிருந்தாய் கோலப் பெரும் சங்கே-குடியேறி வீற்றிருந்தாய் அழகிய பெரும் சங்கே

அரும் பெரும் சங்கு, பெரியதாக நின்றிருந்த மலைகளின் இடையில், இலையுதிர்கால சந்திரன் வந்து எழுந்தாற்போல, வடமதுரை மன்னன் வாசுதேவன் கையில் குடியேறி விற்றிருக்கிறாய் அழகிய பெரும் சங்கே

(பெரிய மலைகளிடையே உள்ள மரங்கள் , இலையுதிர்காலத்தில், இலைகளை உதிர்த்து விட்டதால் முழுநிலவையும் இடையூறின்றி பார்க்கமுடிகிறதாம்) 

No comments:

Post a Comment