Wednesday, March 7, 2018

81- கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள் வேங்கடத்து

கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள் வெங்கடத்துப்
போர்காலத் தெழுந்தருளிப் பொருதவனார் பேர்சொல்லி
நீர்காலத் தெருக்கிலம் பழவிலைபோல் வீழ்வேனை
வார்காலத் தொருநாள்தம் வாசகம்தந் தருளாரே

கார்காலத்து எழுகின்ற கார்முகில்காள் வேங்கடத்து- மழைக்காலத்தே எழுகின்ற வேங்கட மழை மேகங்களே

போர்காலத்து எழுந்தருளிப் பொருதவனார் பேர்சொல்லி- போர்க்காலத்தில் எழுந்தருளிப் போர் புரிந்தவரின் பேர் சொல்லி

நீர்காலத்து எருக்கம் பழ விலைபோல் வீழ்வேனை-நீர் சூழ்ந்த காலத்து பழுத்த எருக்கம் இலை போல வீழ்வேனே

வார்காலத்து ஒருநாள்தம் வாசகம் தந்து அருளாரே- வருங்காலத்தில் நான் வாழ ஒருநாளாவது என் உயிரைப் புதுப்பிக்கும் வாசகம் தந்து அருளச் செய்யுங்கள்

மழைக்காலத்தில் திருமலையில் எழுகின்ற மழை மேகங்களே! இராவணனுடன் போர் புரிய நேரிட்ட போர்க்காலத்தில் எழுந்தருளிய இராமபிரானனின் பெயர் சொல்லி, மழைகாலத்தில் பழுத்து விழுகின்ற எருக்க இலை போல ஒடிந்து கீழே விழுகின்ற எனக்கு,எதிர்வரும் காலத்தில் ஒருநாளாவது என் உயிர் வாழ வேங்கடவன், என்னைச் சேர தான் வருவதாக உங்களிடம் சொன்னார் என்ற நல்லசொல்லை தந்து அருளச் சொல்லுங்கள் 

No comments:

Post a Comment