பருந்தாட் களிற்றுக் கருள்செய்த
பரமன் றன்னை பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை
விட்டு சித்தன் கோதைசொல்
மருந்தா மென்று தம்மனத்தே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப்
பிரியா தென்று மிருப்பாரே
பருந்தாட்களிறுக்கு அருள் செய்த - பருத்த கால்களையுடைய யானைக்கு அருள் செய்த
பரமன் தன்னை பாரின் மேல் - பரமன் தன்னை உலகினில்
விருந்தாவனத்தே கண்டமை - விருந்தாவனத்தில் கண்டு அமைந்ததுப் பற்றி
விட்டு சித்தன் கோதை சொல் - விஷ்ணுசித்தன் எனும் பெரியாழ்வார் மகள் கோதை சொல்
மருந்து ஆம் என்று தம் மனத்தே - மருந்து என்றே கொண்டு தம் மனத்தே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள் - நினைத்து வாழ்பவர்கள்
பெருந்தாள் உடைய பிரானடிக் கீழ் - பெரிய திருவடிகளையுடைய எம்பெருமானின் அடிக் கீழ்
பிரியாது என்றும் இருப்பாரே - பிரியாமல் என்றும் இருப்பார்கள்
பருத்த கால்களையுடைய யானைக்கு அருளிய பரமனை, விருந்தாவனத்தில் கண்டு அமைந்ததுப் பற்றி, பெரியாழ்வார் மகள் கோதை சொன்ன பாடல்களை . வாழ்வு சிறக்கும் மருந்தென்று மனதில் எண்ணி வழிபட்டு, வாழ்பவர்கள், திருமானின் திருவடிகள் கீழ் என்றும் பிரியாமல் இருக்கும் நிலை எய்துவர்
இத்துடன் பதினான்காம் திருமொழியும், நாச்சியார் திருமொழியும் நிறைவுபெற்றது
பரமன் றன்னை பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை
விட்டு சித்தன் கோதைசொல்
மருந்தா மென்று தம்மனத்தே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப்
பிரியா தென்று மிருப்பாரே
பருந்தாட்களிறுக்கு அருள் செய்த - பருத்த கால்களையுடைய யானைக்கு அருள் செய்த
பரமன் தன்னை பாரின் மேல் - பரமன் தன்னை உலகினில்
விருந்தாவனத்தே கண்டமை - விருந்தாவனத்தில் கண்டு அமைந்ததுப் பற்றி
விட்டு சித்தன் கோதை சொல் - விஷ்ணுசித்தன் எனும் பெரியாழ்வார் மகள் கோதை சொல்
மருந்து ஆம் என்று தம் மனத்தே - மருந்து என்றே கொண்டு தம் மனத்தே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள் - நினைத்து வாழ்பவர்கள்
பெருந்தாள் உடைய பிரானடிக் கீழ் - பெரிய திருவடிகளையுடைய எம்பெருமானின் அடிக் கீழ்
பிரியாது என்றும் இருப்பாரே - பிரியாமல் என்றும் இருப்பார்கள்
பருத்த கால்களையுடைய யானைக்கு அருளிய பரமனை, விருந்தாவனத்தில் கண்டு அமைந்ததுப் பற்றி, பெரியாழ்வார் மகள் கோதை சொன்ன பாடல்களை . வாழ்வு சிறக்கும் மருந்தென்று மனதில் எண்ணி வழிபட்டு, வாழ்பவர்கள், திருமானின் திருவடிகள் கீழ் என்றும் பிரியாமல் இருக்கும் நிலை எய்துவர்
இத்துடன் பதினான்காம் திருமொழியும், நாச்சியார் திருமொழியும் நிறைவுபெற்றது
No comments:
Post a Comment