Sunday, March 4, 2018

73- பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும்

பாஞ்சசன்னியத்தைப் பற்பநா பனோடும்
வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை
ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்
ஆய்ந்தேத்த வல்லா ரவரும ணுக்கரே

பாஞ்சசன்னியத்தைப் பற்பநா பனோடும்- பாஞ்சசன்னியத்தை பத்மனாபனோடும்
வாய்ந்த பெருஞ் சுற்றமாக்கிய வண்புதுவை-பெரும் உறவாக்கிய அழகிய வில்லிப்புத்தூரில் பிறந்தவளும்
ஏய்ந்தப்புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்-நிறைந்தப் புகழ்ப் பெற்ற பட்டர்பிரான் மகள் கோதை சொன்ன இந்தப் பத்து தமிழ் பாமாலையை
ஆய்ந்தேத்த வல்லார் அவரும்  அணுக்கரே -பொருள் புரிந்து பாட வல்லவர்கள் கண்ணனுக்கு நெருக்கமானவர்களே!

பாஞ்சசன்னியத்தை பத்மனாபனோடு, பெரும் உறவாக்கிய அழகிய வில்லிபுத்தூரில் பிறந்தவளும்,நிறைந்த புகழ்பெற்ற பட்டர்பிரானின் மகளுமாகிய கோதை சொன்ன இந்தப் பத்து தமிழ் பாமாலையை, பொருள் புரிந்து பாட வல்லவர்கள் கண்ணனுக்கும் நெருக்கமானவர்கள் எனலாம்
(கண்ணனிடம் சங்கு, சதாசர்வ காலமும் இருப்பதால்,அதன் மீது கோதை பொறாமைக் கொண்டு, சண்டைடிவது போல அமைந்துள்லன இந்தப் பத்துப்பாடல்கள்)


No comments:

Post a Comment