Thursday, March 22, 2018

142 - நாட்டைப் படையென்று அயன்முதலா

நாட்டைப் படையென்று அயன்முதலாத்
தந்த நளிர்மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும்
விமலன் றன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும்
களிறும் புள்ளு முடன்முடிய
வேட்டை யாடி வருவானை
விருந்தா வனத்தே  கண்டோமே

நாட்டைப் படையென்று அயன்முதலாத் தந்த - நாட்டைப் படைக்கச் சொல்லி பிரம்மனை

நளிர் மா மலருந்தி - குளிர்ந்த தொப்புள் கொடியிலே உந்தை படைத்து ,(அந்த பிரம்மன் மூலம் பல உயிர்களை பிறப்பித்து)

வீட்டைப் பண்ணி விளையாடும் - பிறப்பு முதல் வீடு பேறு பெரும்வரை ஒருவரின் வாழ்வில் விளையாடும்

விமலன் தன்னை கண்டீரே - விமலனைப் பார்த்தீர்களா?

காடடி நாடித் தேனுகனும் - காட்டில் சென்று தேனுகன் என்ற அசுரனையும்

களிறும் புள்ளும் உடன் முடிய - குவலயபீடம் என்ற யானையையும், பகாசுரன் என்ற பறவை வடிவ அசுரனையும்

வேட்டையாடி வருவானை - வேட்டையாடி வந்தவனை

விருந்தா வனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் கண்டோமே

கேள்வி - நாட்டைப் படைக்கச் சொல்லி பிரம்மனை ,குளிர்ந்த தொப்புள் கொடியிலே உந்தை படைத்து (அந்த பிரம்மன் மூலம்) பல உயிர்களை பிறப்பித்து, பிறப்பு முதல் வீடு பேறு பெரும்வரை ஒருவர் வாழ்வில் விளையாடும் விமலனைப் பார்த்தீர்களா?

பதில் - காட்டில் சென்று, தேனுகன் என்ற அசுரனையும், குவலயபீடம் என்ற யானையையும், பகாசுரன் என்ற பறவை வடிவ அசுரனையும், வேட்டையாடி வந்தவனை விருந்தாவனத்திலே கண்டோமே

No comments:

Post a Comment