தரும மறியாக் குறும்பனைத்
தங்கைச் சாரங்க மதுவேபோல்
புருவ வட்ட மழகிய பொருத்த
மிலியைக் கண்டீரே உருவு
கரிதாய் முகம் செய்தாய்
உதயப் பருப்ப தத்தின்மேல்
விரியும் கதிரே போல்வானை
விருந்தா வனத்தே கண்டோமே
தருமம் அறியா குறும்பனை - நியாயம் என்பதே என்ன என அறியா குறும்பனை
தன் கை சாரங்கம் அது போல- தனது கையில் உள்ள சாரங்கம் எனும் வில்லைப் போல
புருவ வட்டம் அழகிய பொருத்த மிலியைக் கண்டீரே - புருவ வட்டம் கொண்ட அழகிய பொருத்தம் இல்லாதவனைக் கண்டீர்களா?
உருவு கரிதாய் முகம் செய்தாய் - உருவம் கரியதாக, முகம் செம்மையாக
உதயப் பரப்பதத்தின் ;- மலையின் மீது
மேல் விரியும் கதிரே போல்வானை - விரிகின்ற கதிரைப் போன்ற முகம் கொண்டவனை
விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் பார்த்தோம்
கேள்வி - (தான் அவன் மீது அவ்வளவு காதல் கொண்டும் மதிக்கத் தெரியாதவன்.தரும சிந்த்னையற்றவன் என்றெல்லாம் ஆண்டாள் கோபத்தில் சொல்வதெல்லாம் அவன் மீது கொண்ட காதலால்)நியாயம் என்றால் என்னவென்றே தெரியாதவன், தன் கையில் உள்ள சாரங்கம் எனும் வில்லைப் போன்று புருவத்தினைக் கொண்ட அழகற்றவன் ..அவனைக் கண்டீர்களா (அழகன் என்று சொல்லிவந்தவள்..கோபத்தால்..இப்படி சொல்கிறாள்)
பதில் - உருவம் கரியதாக, முகம் செம்மையாக, மலையின் மீது..விரிகின்ற சுரியனின் கதிரைப் போன்ர முகம் கொண்டவனை விருந்தாவனத்தில் கண்டோம்
தங்கைச் சாரங்க மதுவேபோல்
புருவ வட்ட மழகிய பொருத்த
மிலியைக் கண்டீரே உருவு
கரிதாய் முகம் செய்தாய்
உதயப் பருப்ப தத்தின்மேல்
விரியும் கதிரே போல்வானை
விருந்தா வனத்தே கண்டோமே
தருமம் அறியா குறும்பனை - நியாயம் என்பதே என்ன என அறியா குறும்பனை
தன் கை சாரங்கம் அது போல- தனது கையில் உள்ள சாரங்கம் எனும் வில்லைப் போல
புருவ வட்டம் அழகிய பொருத்த மிலியைக் கண்டீரே - புருவ வட்டம் கொண்ட அழகிய பொருத்தம் இல்லாதவனைக் கண்டீர்களா?
உருவு கரிதாய் முகம் செய்தாய் - உருவம் கரியதாக, முகம் செம்மையாக
உதயப் பரப்பதத்தின் ;- மலையின் மீது
மேல் விரியும் கதிரே போல்வானை - விரிகின்ற கதிரைப் போன்ற முகம் கொண்டவனை
விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் பார்த்தோம்
கேள்வி - (தான் அவன் மீது அவ்வளவு காதல் கொண்டும் மதிக்கத் தெரியாதவன்.தரும சிந்த்னையற்றவன் என்றெல்லாம் ஆண்டாள் கோபத்தில் சொல்வதெல்லாம் அவன் மீது கொண்ட காதலால்)நியாயம் என்றால் என்னவென்றே தெரியாதவன், தன் கையில் உள்ள சாரங்கம் எனும் வில்லைப் போன்று புருவத்தினைக் கொண்ட அழகற்றவன் ..அவனைக் கண்டீர்களா (அழகன் என்று சொல்லிவந்தவள்..கோபத்தால்..இப்படி சொல்கிறாள்)
பதில் - உருவம் கரியதாக, முகம் செம்மையாக, மலையின் மீது..விரிகின்ற சுரியனின் கதிரைப் போன்ர முகம் கொண்டவனை விருந்தாவனத்தில் கண்டோம்
No comments:
Post a Comment