Tuesday, March 13, 2018

106 - பொங்கோதம் சூழ்ந்த புவனியும்

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான்
செங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையா லிடர்தீர்வ ராகாதே

பொங்கு ஓதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்- பொங்கும் அலைகள் சூழ்ந்த நிலமும், விண் உலகமும்

அங்கு யாதும்சோராமே ஆள்கின்ற எம்பெருமாள்- எந்தக் குறையுமின்றி, தளர்வின்றி ஆள்கின்ற எம்பெருமான்

செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார் - செங்கோல் உடைய  திருவரங்கச் செல்வனார்

எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே - என் வளையாலா துன்பம் தீரப் பெறுவார்?  ஆகாதே!

பொங்கும் அலைகள் சூழ்ந்த நிலமும்,விண் உலகமும், எந்தக் குறையுமின்றி,தளர்வின்றி ஆள்கின்ற எம்பெருமான், செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார், என் வளையாலா துன்பம் தீரப் பெறுவார்? அது முடியாதே

(அவர் நினைவால், இவளது உடல் மெலிந்ததாம்.வளையல்கள் கழண்டதாம்.)

No comments:

Post a Comment