Monday, March 5, 2018

77- மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்து

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு
என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும்
பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடமை செப்புமினே

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள்- உடம்பில் மின்னல் தோன்ற எழும் மேகங்களே
வேங்கடத்துத் தன்னாகத் திருமங்கை தங்கிய சீர்மார்வதற்கு-வேங்கடத்தான் தன் உடம்பில் திருவாகிய தேவியை தங்க வைத்திருக்கும் அந்த சீர் திருவாழ்மார்பனாவனிடம்
என்னாகத்து இளம் கொங்கை விரும்பித்தாம் நாடோறும்-என் உடம்பில் உள்ள இளம் மார்பகங்கள் நானே விரும்பி நாள்தோறும்
பொன்னாகம் புல்குதற்கு என் புரிவுடமை செப்புமினே-அவனது பொன்னான உடம்பை அணைத்துக் கொள்ள ஆசைப்படுவதாகச் சொல்லுங்கள்

உடம்பில் மின்னல் தோன்ற எழும் மேகங்களே, வேங்கடத்தான் தன் உடம்பில்,திருவாகிய தேவியைத் தங்க வைத்திருக்கும் அந்த சீர் திருவாழ்மார்பனாவனிடம், என் உடம்பில் உள்ள இளம் கொங்கைகள் நானே விரும்பி நாள்தோறும்,அவனது பொன்னான உடம்பை அணைத்துக் கொள்ள ஆசைப்படுவதாக சொல்லுங்கள்

No comments:

Post a Comment