Saturday, March 17, 2018

119- கார்த்தண் முகிலும் கருவிளையும்

கார்த்தண் முகிலும் கருவிளையும்
காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடு  கின்றன வென்னைவந்திட்
டிருடீகே சன்பக்கல் போகேயென்று
வேர்த்துப் பசித்து வயிறசைந்து
வேண்டடிசி லுண்ணும் போதுஈதென்று
பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும்
பத்தவி லோகநத் துய்த்திடுமின்

கார்த்தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும் - கருமையான குளிர்ந்த முகிலும்,கருவிளைப்பூவும்,காயாம் பூவும், தாமரை மலரும்

ஈர்த்திடுகின்றன என்னை வந்து - என்னை வந்து ஈர்த்திடுகின்றன

இருடீகேசன் பக்கம் போகே என்று - இரிடீகேசன் (ரிஷிகேசன்) பக்கம் போ என்று

வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்ட- வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து உணவினை வேண்ட

அடிசல் உண்ணும் போது - அடிசல் உண்ணும் போது

ஈதென்று பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் -  உணவு உண்ணும் காலம் இதுவென்று நெடுநேரம் முனிவர்களின் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கும்

பத்த விலோச நத்து உய்த்திடுமின் - பத்தவிலோசனத்தில் என்னைக் கொண்டு சேர்த்துவிடுங்கள்

கருமையான குளிர்ந்த முகிலும், கருவிளைப்பூவும், காயாம் பூவும்,தாமரை மலரும், என்னை வந்து இரிடீகேசன் பக்கம் போ என ஈர்த்திடுகின்றன.வேர்த்துப் பசித்து உணவு வேண்டி வயிறு அசைய, அடிசல் உண்ணுகையில்..உணவு உண்ணும் நேரம் இது என முனிவர்களின் வரவை எண்ணிக் காத்திருக்கும்..பத்த விலோசனத்தில் (ஞாபகம் வர அங்கு) என்னைக் கொண்டு சேர்த்து விடுங்கள்

(பத்தவிலோசனம் என்பது யமுனை ஆற்றின் கரையில் உள்ள ஒரு தலம்.ஒருநாள் கண்ணன், பலராமனுடனும், நண்பர்கலுடனும் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்க,நண்பர்களுக்கு கடும் பசி வந்தது.உடன் கண்ணன்"அருகில் முனிவர்கள் "ஆங்கிரஸ்" என்ற வேள்வி செய்து கொண்டிருப்பதாகவும்,அவர்கள் மனைவியிடம் தன் பெயரைச் சொன்னால் உணவு அளிப்பார்கள்" என்றும் செல்லச் சொன்னான்.ஆனால் அங்கு சென்ற நண்பர்களை  நம்பாமல் முனிவர்கள் திருப்பி அனுப்பிவிட்டனர்.அதைக்கேட்ட கண்ணன், முனிவர்களின் மனைவிகளிடம், தான் அங்கு இருப்பதைச் சொல்லச் சொன்னான்.நண்பர்களும் அப்படிச் செறு ம்னைவிமார்களிடம் சொல்ல, அவர்கள் மனம் மகிழ்ந்து, எதிர்ப்பையும் பொருட் படுத்தாது உணவைக் கொண்டு வந்து கொடுத்து, கண்ணனையும் , பலராமனையும் வணங்கினர்.பின், தினமும் அவர்கள் உணவு கொண்டு வந்து கொடுப்பது வாடிக்கையாயிற்று.பக்தம் என்றால் சோரு.விலோசனம் என்றால் பார்வை.சோரு பார்த்திருக்கும் இடம் அதானால் அத்தலம் பக்தவிலோசனம் ஆயிற்று.)

கண்ணன் பழகிய இடமெல்லாம், தன்னை அழைத்துச் செல்லச் சொல்கிறாள் கோதை 

No comments:

Post a Comment