Sunday, March 4, 2018

72- பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப

பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன்
வாயமுதம் பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்காய்
சிதையாரோ வுன்னோடு செவ்வப்பெ ருஞ்சங்கே

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப-பதினாறு ஆயிரம் தேவிமார்கள் பார்த்துக் கொண்டிருக்க
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன் தன்- தேனினை வாயில் கொண்டவனைப் போல மாதவனின்
வாயமுதம் பொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டக்காய்-
வாயமுதம் என்ற பொது சொத்தை நீ ஒருவனாக தேனினை உண்பதுபோல நீ உண்டாய்
சிதையாரோ உன்னோடு செல்வப் பெருஞ்சங்கே- (இதை வேடிக்கைப் பார்க்கும் பெண்கள் மனம்) அதைக்கண்டு சிதைந்து போய் நோக மாட்டார்களா செல்வச் சங்கே

பதினாறு ஆயிரம் தேவிமார்கள் பார்த்துக் கொண்டிருக்க, தேனினை வாயில் கொண்டவனைப் போன்ற மாதவனின் , வாயமுதம் என்ற பொது சொத்தை நீ ஒருவன் மட்டுமே தேனினை உண்பது போல உண்கிறாய் .இதை வேடிக்கைப் பார்க்கும் பெண்கள் மனம் சிதையமாட்டார்களா செல்வச் சங்கே!

No comments:

Post a Comment