Friday, March 9, 2018

88 - துங்க மலர்ப் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை

துங்க மலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற
செங்கட் கருமுகிலின் திருவுருப் போல்மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள் தொகுபூஞ்சுசுனை காள்சுனையில்
தங்குசெந் தாமரைகாள் எனக்கோர் சரண் சாற்றுமினே

துங்க மலர்ப் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற-துங்க மலர்ச்சோலை சூழ்ந்த திருமாலிருஞ்சோலையில் நின்ற

செங்கட் கருமுகிலின் திருவுருப் போல்மலர்மேல்-செம்மையான கண்களும்,மழை பொழியும் மேகத்தின் கருமை நிறம் கொண்ட கண்ணனின் திருவுருவத்தைப் போல மலர்மேல்

தொங்கிய வண்டினங்காள் தொகு பூஞ்சுனைகாள் -தொங்கிய வண்டினங்களே!அங்கே மொத்தமாய் கூடியிருக்கும் பூஞ்சுனைகளே

சுனையில் தங்கு செந்தாமரைகாள் எனக்கோற் சரண் சாற்றுமினே-பூஞ்சுனையில் வாழும் செந்தாமரைகளே!அவன் நிறம் கொண்டு அவன் திருவுருவத்தை நினைவூட்டி விட்டுவிட்டீர்கள்(இப்போது)நான் அடைக்கலம் புக வழி சொல்லுங்கள்

கொன்றைமலர்ச் சோலை சூழ்ந்த திருமாலிருஞ்சோலை நின்ற, செம்மையான கண்களும்,மழை பொழியும் மேகத்தின் கருமை நிறம் கொண்ட கண்ணனின் திரு உருவத்தைப் போல உள்ள மலர் மேல் தொங்கிய வண்டினங்களே!அங்கு மொத்தமாய்க் கூடியிருக்கும் பூஞ்சுனைகளே! பூஞ்சுனையில் பூத்துள்ள செந்தாமரைகளே!
நீங்கள் யாவரும் அவன் நிறம் கொண்டு, அவனை நினைவூட்டிவிட்டீர்கள்.அவனை அடைக்கலம் புக எனக்கெ எனக்கென ஒரு சரண் என்னவென சொல்லுங்கள்

No comments:

Post a Comment