Thursday, March 8, 2018

86- கருவிளை யொண்மலர்கான் காயாமலர் காள்திருமால்

கருவிளை யொண்மலர்காள்  காயாமலர் காள்திருமால்
உருவொளி காட்டுகின்றீர் எனக்குய்வழக் கொன்றுரைப்பீர்
திருவிளை யாடுதிண்டோள் திருமாலிருஞ் சோலைநம்பி
வரிவளை யில்புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே

கருவிளை ஒண் மலர்காள் காயாமலர்காள்-அழகிய கருவிளை மலர்களே! காயம் பூக்களே

திருமால் உருவொளி காட்டுகின்றீர் எனக்கு உய்ய வழக்கு ஒன்று உரைப்பீர்- என் திருமாலின் உருவத்தை நினைவூட்டுகின்றீர்கள்.அவர் மீது வழக்கொன்று உள்ளது.தீர்ப்பு சொல்லுங்கள்

திரு விளையாடு திண்தோள் திருமாலிருஞ்சோலை நம்பி- திருமகள் விளையாடும் திடம் மிக்க தோள்கொண்ட திருமாலிருஞ்சோலை நம்பி

வரிவளை இல் புகுந்து வந்தி பற்றும் வழக்கு உளதே-என் வீட்டிற்குள் புகுந்து என் வளையல்களைப் பலவந்தமாகத் திருடிய கள்வன் அவன்.அந்த வழக்கிற்கும் தீர்ப்பு சொல்லுங்கள்

(கருவிளை மலர்- சங்குப் பூ)

அழகிய சங்கு புஷ்பங்களே!காயாம் பூக்களே(இவை பூக்குமேயன்றி காய்க்காது.இவை திருமாலுக்கு மட்டுமே உரியது) என பூக்களிடம் நியாயம் கேட்கின்றாள்.(தன்னைச் சேராமல் திருமகளோடு உள்ளார் என ஒரு வழக்கு.அடுத்து) அவன் வீட்டிற்குள் வந்து பலவந்தமாக என் வளையல்களைக் களவாடிச் சென்றுள்ளான் என்று வழக்கு.பூக்களே! தீர்ப்பு சொல்லுங்கள் என் கிறாள்

(அவரை நினைத்து, நினைத்து மெலிந்ததால், வளையல்கள் கழண்டு விழுந்ததாம்) 

No comments:

Post a Comment