Monday, March 12, 2018

101- மழையே மழையே மண்புறம்..

மழையே மழையே மண்புறம் பூசியுள் ளாய்நின்ற
மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல் வேங்கடத்துள் நின்ற
அழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத் தகப்படத்
தழுவநின்று என்னைத் ததர்த்திக்கொண் டூற்றவும் வல்லையே

மழையே மழையே மண்புறம் பூசியுள்ளாய் நின்ற-மழையே மழையே வெளியே மண்பூசி உள்ளே நின்ற

 மெழுகூற்றினாற் போல் ஊற்று- மெழுகு ஊற்றியது போல ஊற்றி

நல் வேங்கடத்துள் நின்ற - நலம் செய்யும் வேங்கடத்தில் நின்ற

அழகப் பிரானார் தம்மை என் நெஞ்சத் தகப்பட த் தழுவ நின்று-  அழகிய பிரான் தன்னை என் நெஞ்சத்திலே அவரை முழுவதும் ஆரத் தழுவ நின்று அணைக்கும்படி

என்னைததர்த்திக் கொண்டு ஊற்றவும் வல்லையே- என்னை அப்படியே நெருக்கிக் கொண்டு அவரை ஊற்றவும் வல்லாயோ

மழையே மழையே வெளியே மண்பூசி  உள்ளே நின்ற, மெழுகு ஊற்றியது போல ஊற்றி, நலம் செய்யும் வேங்கடத்தில் நின்ற, அழகிய பிரான் தன்னை என் நெஞ்சத்தில், ஆரத் தழுவி அணைக்கும்படி, என்னை அப்படியே நெருக்கிக் கொண்டு அவரை ஊற்றவும் வல்லாயோ (என் கிறாள்)

(மழைத்துளிகளிலால் மண் மெழுகு போல தோற்றமளிக்கும்.ஆண்டாள் தானே மெழுகாகி..அதை, பெருமாள் என்னும் உலோகத்தை. ஒரு சிறு இடைவெளி இன்றி, மெழுகு உடலில் எந்த இடைவெளியையும் விடாது நிரப்பி ஊற்றினால் அவனை ஆசைதீர கட்டி அணைப்பது போல அணைத்துக் கொள்வேன் என் கிறாள்.எவ்வளவு புத்திக்கூர்மை கோதைக்கு)

No comments:

Post a Comment