Friday, March 9, 2018

89- நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை ந்ம்பிக்கு


நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்கார வடிசல் சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ

நாறுநறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு- நல்ல மணம் வீசும் சோலை கொண்ட திருமால் இருக்கும் சோலை நம்பிக்கு

நான் நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்-நான் நூறு பானையில் வெண்ணெய் என் வாயால் நேர்ந்து கொண்டு நேர்த்திக்கடன் வைத்தேன்

நூறுதடா நிறைந்த அக்காரவடிசல் சொன்னேன்- நூறு பானை நிறைய அக்காரவடிசல் சொன்னேன்

ஏறுதிருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங்கலோ-குறையாத செல்வங்களைக் கொண்டவன், இன்று வந்து இவற்றை ஏற்றுக்கொள்வானாக


நல்ல மணம் வீசும் சோலை கொண்ட திருமால் இருக்கும் சோலை நம்பிக்கு, நூறு சிறியபானையில் வெண்ணெயை உருக்கி அதில் நெய் செய்து, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டேன்.நூறு பானை அக்காரவடிசல் படத்தெங்குறையாத செல்வங்களைக் கொண்ட திருமால் , இன்றுவந்தௌ அவற்றை ஏற்றுக்கொள்வானாக

No comments:

Post a Comment