Monday, March 5, 2018

75- மாமுத்த நிதிசொரியும் மாமுகில்கள் வேங்கடத்து

மாமுத்த நிதிசொரியும் மாமுகில்கள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே
காமத்தீ யுள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்குங்கிலக்காய்நா னிருப்பேனே

மாமுத்த நிதிசொரியும் மாமுகில்கள்- பெரும் முத்துகளைப் போன்று வெண்துளிகள் பொழியும் பெரும் மேகங்களே
வேங்கடத்துச் சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தியென்னே-திருவேங்கடமலையின் சாமத்தின் (நடு இரவு)கருமை நிறம் கொண்ட தாடாளனிடம் இருந்து சேதி எதுவும் எனக்கு உண்டா?
காமத்தீயுள் புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்-காமத்தீ என் உள் புகுந்து எனைக் கவ்வி இழுக்க முன் இரவுக்கும், நடு இரவுக்கும் இடையில்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நானிருப்பேனே- வீசும் இன்பம் தரும் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே

பெரும் முத்துகளியப் போல வெண்துளிகள் பொழியும் பெரும் மேகங்களே,திருவேங்கடமலையின் நடுஇரவில், கருமை நிறம் கொண்ட தாடாளனிடம் இருந்து எனக்கு ஏதும் சேதி உண்டா?காமத்தீ என் உள் புகுந்து  என்னைக் கவ்வி இழுக்கிறது இரவில்.வீசும் இன்பம் தரும் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே!(இன்பம் தரவேண்டிய தென்றல், தாடாளனிடம் இருந்து சேதி வராததால் துன்பம் அளிக்கிறதாம்)   

No comments:

Post a Comment