Monday, March 19, 2018

129 - நடையொன் றில்லா வுலகத்து

நடையொன் றில்லா வுலகத்து
நந்த கோபன் மகனென்னும்
கொடிய கடிய திருமாலால்
குளப்புக் கூறு கொளப்பட்டு
புடையும் பெயர் இல்லேன் நான்
போட்கன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள்
போகா வுயிரென்னுடம்பையே

நடையொன்று  இல்லா உலகத்து - ஒழுங்குமுறை ஏதுமில்லா இவ்வுலகில்

நந்தகோபன் மகனென்னும் கொடிய கடிய திருமாலால் - நந்தகோபன் மகன் என்னும் கொடூரமான இரக்கமற்ற கல் போன்ற கடினமான திருமாலால்

குளப்புக் கூறு கொளப்பட்டு - பெரும் துன்புறுத்தலுக்கு ஆளாகி

புடையும் பெயர் இல்லேன் நான் - அசையவும் முடியாமல் இருக்கின்றேன் நான்

போட்கன் மிதித்த அடிப்பாட்டில் - அந்தப் பொய்யன் மிதித்த அவன் கால் அடியில் கிடக்கும்

பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் - பொடியினைக் கொணர்ந்து (காலடி மணலைக் கொணர்ந்து)பூசுங்கள்

போகா உயிர் என்னும் உடம்பையே - போக மறுக்கும் உயிர் கொண்ட என் உடம்பில்

நந்தகோபன் மகன் என்னும் கொடூரமான, கல் நெஞ்சம்  கொண்ட இரக்கமற்ற திருமாலால், பெரும் துன்புறுத்தலுக்கு ஆளாகி அசையவும் முடியாமல் இருக்கின்றேன் நான்.ஒழுங்கு முறை ஏதுமில்லா இவ்வுலகில்.
அந்தப் பொய்யன் மிதித்த கால் அடியில் கிடக்கும் மண்னை கொண்டு வந்து என் போக மறுக்கும் உயிரைத் தாங்கும் உடலில் பூசுங்கள்

(விரக்தியின் உச்சிக்கேப் போய் விட்ட ஆண்டாள்..திருமாலை பொய்யன் என் கிறாள்.அவள் அளவிற்கு அதிகப் பாசமே அவளை அப்படிச் சொல்லத் தூண்டுகிறது)

No comments:

Post a Comment