Monday, March 19, 2018

128 - அழிலும் தொழிலு முருக்காட்டான்

அழிலும் தொழிலு முருக்காட்டான்
அஞ்சே லென்னானவனொருவன்
தழுவி முழுகிப் புகுந்தென்னைச்
சுற்றிச் சுழன்று போகானால்
தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே
நெடுமா லூதி வருகின்ற
குழுவின் தொளைவாய் நீர்கொண்டு
குளிர முகத்துத் தடவீரே

அழிலும் தொழிலும் உர்க்காட்டான் - அழுதாலும், தொழுதாலும் பயனில்லை.தன்முன் என் உருவைக் காட்டாதவன்

அஞ்சேல் என்னான் எவனொருவன் - அச்சம் கொள்ளாதே! நான் இருக்கிறேன் என எனக்கு ஆறுதல் சொல்லவில்லை அவன்

தழுவி முழுகி புகுந்து என்னை - அந்த ஒருவன் என்னைச் சுற்றித் தழுவி என்னுள் புகுந்து என்னை

சுற்றிச் சுழன்று போகானால் - சுற்றிச் சுழன்றுப் போகிறான்

தழையின் பொழில் வாய் நிரைப் பின்னே - சோலையில்  மயில் தோகைக் குடையின் கீழ் பசுக்கள்பின்னே

நெடுமால் ஊதி வருகின்ற- நெடுமால் ஊதி வருகின்ற

குழுவின் தொளவாய் நீர் கொண்டு - புல்லாங்குழலின் துளையின் வழியாக வெளி வரும் நீர்கொண்டு

குளிர முகத்துத் தடவீரே! - என் முகம் முழுதும் தடவி விடுவீர்களாக

அழ்தாலும், தொழுதாலும், என் முன்னே தன் உருவைக் காட்டாதவன்.அவன் என்னைச் சுற்றித்  தழுவி, என்னுள் புகுந்து போகிறான்.சோலையில், மயில் தோகையைக் குடையாகக் கொண்டு , பசுக்களின் பின்னால், புல்லாங்குழல் ஊதி வருகின்ற கண்ணனின், புல்லாங்குழல் வழியே வெளிவரும் நீர் (ஆண்டாளைப் பொறுத்தவரை வாய் அமுதம்) கொண்டு, என் முகம் முழுதும் தடவி விடுவீர்களாக.

No comments:

Post a Comment