Wednesday, March 14, 2018

112- கண்ணாலங்கோடித்து கன்னிதன்னைக்


கண்ணாலங்கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணார்ந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த
பெண்ணாளன் பேணுமூர் பேருமரங்கமே

கண்ணாலங்கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்- புதுத்துணி உடுத்தி, திருமணம் செய்து கன்னியைக் கைப்பிடிக்கலாம் என்று

திண்ணார்ந்திருந்த சிசுபாலன் தேசழிந்து- உறுதியுடன் இருந்த சிசுபாலன் தன் ஒளி இழந்து

அண்ணார்ந்திருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த- அண்ணந்து பார்த்திருக்க அங்கே அவளைக் கைப்பிடித்த

பெண்ணாளன் போற்றும் ஊர் பேரும் அரங்கமே- பெண்ணாளன் போற்றும் ஊர்பேரும் அரங்கமே


புதுத்துணி உடுத்தி,திருமணம் செய்து கன்னியைக் கைப்பிடிக்கலாம் என, உறுதியுடன் இருந்த சிசுபாலன், ஒளி இழந்து அண்ணாந்து பார்த்திருக்க, அங்கு அவளைக் கைப்பிடித்த பெண்ணாளனை போற்றும் ஊர் பெயர் திருவரங்கமே!

(விதர்ப்ப நாட்டு மன்னன் பீஷ்மகனுக்கு குக்மி என்ற மகனும்,ருக்மணி என்ற மகளும் இருந்தனர்.ருக்மியின் நண்பன் சிசுபாலனுக்கு ருக்மணியை மணமுடிக்க முடிவு செய்தான் ருக்மி.ஆனால், ருக்மணியோ, கண்ணனை விரும்பினாள். அவன் கண்முன்னலேயே கண்ணன் ருக்மணியைத் தட்டிச் சென்றார்.அப்படிப்பட்ட கண்ணனை பெண்ணாளன் என்று சொன்ன கோதை, பேண் மனத்தை அறிந்து அன்று நடந்து கொண்ட படி இன்று என்னை அறிந்து நடந்து கொள்ளவில்லையே என் கிறாள்)

No comments:

Post a Comment