Thursday, March 8, 2018

84- சிந்தூரச் செம்பொடியைப்போல் திருமாலிருஞ்சோலையெங்கும்

(ஒன்பதாம் பத்து ஆரம்பம்,இந்தப் பாடல்களும் ஆண்டாள்..அழகருக்குவ் சமர்ப்பணம் செய்தவை.திருமால் இரும் சோலை என்பதே அழகர்மலையானது.அங்கிருக்கும் பூக்களிடம் பிதற்றுகிறாள் கோதை)

சிந்தூரச் செம்பொடியைப்போல் திருமாலிருஞ்சோலையெங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்
மந்திரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட
சுந்திரத் தோளுடையான் கழலையினின் றுய்துங்க்கொலோ

சிந்தூரச் செம்பொடியைப் போல் திருமாலிருஞ்சோலையெங்கும்- பற்பல வண்ணங்கள் கொண்ட செம்மையான நுண்பொடி போல திருமால் இருக்கும் சோலையெங்கும்

இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்-பல வண்ணங்கள் கொண்ட வண்ணத்துப் பூச்சிகளானவை மேலெழும்பியும். பறந்தும் சோலைக்கு வண்ணங்கள் இட்டன

மந்திரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட- மந்திரமலையைக் கடந்து அமிழ்தம் பெற்ற பிறகு தோன்றிய,அமிழ்தம் போன்ற திருமகளை உண்டவன்

சுந்தரத்  தோளுடையான் கழலையின்று உய் துங்கொலோ- அழகிய தோளையுடையவன் காதல் என்னும் வலையில் சிக்கிக்கொண்ட நான் இதிலிருந்து எப்படி மீள்வேன்..

பற்பல வண்ணங்கள் கொண்ட வண்ணத்துப் பூச்சிகள், மலை மீது எழுந்தும், பரவியும் தன் வண்ணங்களை மலைக்கு இட்ட திருமாலிருஞ்சோலையில்.மந்திரமலையைக் குடைந்த பிறகு தோன்றிய வள் திருமகள்.அந்த அழகான பிரா ட்டியைக் கொண்டவன், அழகிய தோள்களைஉடையவன், அவன் மீது காதல் எனும் வலையில் சிக்கிக் கொண்டுள்ள நான் எப்படி மீள்வேன்

No comments:

Post a Comment