Sunday, March 11, 2018

95-மாற்றோன்றிப் பூக்காள்

மேற்றோன்றிப் பூக்காள் மேலுல
கங்களின் மீதுபோய்
மேற்றோன்றும் சோதி வேத
முதல்வர் வலங்கையில்
மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர்
போலச் சுடாது எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து
வைத்துக்கொள்கிற்றிரே

மேற்றோன்றிப் பூக்காள்- மரத்திலே பூத்திருக்கும் மருதாணிப் பூக்களே

மேலுலகங்களின் மீது போய்-மேல் உலகங்களில் கடந்து சென்று

மேற்றோன்றும் சோதி வேத முதல்வர் வலங்கையில்- அதற்கும் மேலாகத் தோன்றும் ஒளி வடிவமான  வேதங்களின் முதல்வன் வலக்கையின்

மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர் போலச் சுடாது-மீது இருக்கும் சக்கரத்தின் கோபச் சுடர் போல என்னைச் சுடாமல்

எம்மை மாற்றோலைப் பட்டவர் - என்னை அவனுக்கு மாற்றோலை எழுதி

கூட்டத்து வைத்துக் கொள்கிற்றிரே- என் தலைவனின் கூட்டத்துடன் என்னை வைத்துவிடுகிறீர்களா

(இம்முறை மருதாணிப் பூக்களிடம் பேசுகிறாள்)
மருதாணி மரத்தின் மீது பூத்திருக்கும் மருதாணி பூக்களே! நீங்கள் அப்படியே பறந்து போய் மேல் உலகத்திற்குப் போய் அவற்றையும் கடந்து அதற்கும் மேலாக உள்ள வைகுண்டத்தில் உறைந்துள்ள ஒளி வடிவமானவேதங்களின் முதல்வனின் வலக்கையில் உள்ள (தீயவர்களை அழிக்கும்)
சக்கரத்தின் வெஞ்சுடர் போல சுடாது, என்னை அவனுக்கே சொந்தம் என மாற்றோலை எழுதி, என் தலைவனின் கூட்டத்தில் என்னை வைத்துவிடுகிறீர்களா?

No comments:

Post a Comment