Tuesday, March 6, 2018

79-சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்மு கில்காள் மாவலியை

சலங்கொன்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள் மாவலியை
நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறியபொழிவீர்காள்
உலங்குண்ட விளங்கனிபோல் உன்மெலியப் புகுந்து என்னை
நலங்கொண்ட நாராணற்கென் நடலைநோய் செப்புமினே

சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள்- நீர் கொண்டு கிளர்ந்து எழுந்த குளிர்ந்த மேகங்களே

மாவலியை நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர் காள்- மன்னன் மாவலியினை மூன்றாம் அடியில் நிலத்தில் வைத்து அவனைக் கொண்டவரின் வேங்கடத்திலே வரிசையாக மேலேறிப் பரவிப் பொழியும் மேகங்களே!

உலங்குண்ட விலங்கனி போல் உன்மெலியப் புகுந்து என்னை- கொசு உண்ட விளாம்பழம்போல என் உள்ளே புகுந்து (உன் நினைவால்) என்னை மெலிய வைத்து

நலங்கொண்ட நாராயணனுக்கு என் நடலை நோய் செப்புமினே- என் நலத்தைக் கொள்ளை கொண்ட நாராயணனுக்கு என் துன்ப நோய் சொல்லுங்களேன்

கடலில் இருக்கும் நீரினைஎடுத்துக் கொண்டு, மேலேறி, பின் குளிர்ந்த மேகங்களே!ஓரடியில் மண்ணையும், இரண்டாம் அடியில் விண்ணையும்,மூன்றாம் அடியில் மாவலியின் தலையையும் கொண்டவனின், வேங்கடமலையில்,வரிசையாக மேலேறி, பரவி மழையாய் பொழியும் மேகங்களே!விளாம்பழத்தை கொசு மொய்த்து,அதன் உள்ளிருக்கும் சாற்றினை எடுத்து விட்டால், எப்படி கூடு மட்டும் இருக்குமோ. அதுபோல நாராயணன் மீது நான் வைத்த காதலால் மெலிந்தேன்.எனது இந்நிலைக்கு அவனே காரணம்.நீங்கள் அவனிடம் சென்று என் துன்ப நோயைச் சொல்லுங்களேன்  

No comments:

Post a Comment