Monday, March 12, 2018

104- தாமுகக்கும் தம்கையில் சங்கமே..

(பதினோராம் திருமொழி ஆரம்பம்.இவை அணைத்தும் திருவரங்கனுக்கு அர்ப்பணம்)

தாமுகக்கும் தம்கையில் சங்கமே  போலாவோ
யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர்
தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்
ஆமுகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே

தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ- தாம் விரும்பி தனது கையில் கொண்டுள்ள சங்குபோல் ஆகுமோ

யாம் முகக்கும் எம் கையில்சங்கமும் ஏந்திழையீர்- நான் விரும்பி என் கையில் அ ணிந்துள்ள  சங்குவளை?(சொல்லுங்கள் )சிறந்த அணிகலன் களை அணிந்துள்ள பெண்களே

தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்_ தீ கக்கும் முகம் கொண்ட நாகத்தினை அணைத்து அதன் மீது படுத்திருக்கும் திருவரங்கர்

ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே-என் முகத்தைப் பார்க்க மாட்டாரா? (வேதனையுடன் அம்மாவை அழைக்கிறாள்) அம்மா..அம்மா

சிறந்த அணிகலங்களை அணிந்திருக்கும் பெண்களே! நான் விருமி என் கைகளில் அணிந்துள்ள சங்கு வலை, தீ கக்கும் முகம் கொண்ட நாகத்தினை அணைத்துப் படுத்திருக்கும் திருவரங்கர்< தானே விரும்பி தனது கையில் வைத்துள்ள சங்கு போல ஆகுமா> அவர் என் முகத்தைப் பார்க்க மாட்டாரா? (என வேதனையில், கவலையில்..சாதாரண மானிடர் போல )அம்மா...அம்மா..(என அம்மாவைத் துணைக்கிழுக்கிறாள்0

No comments:

Post a Comment