Thursday, March 15, 2018

115 - நாணி யினியோர் கருமமில்லை

நாணி யினியோர் கருமமில்லை
நாலய  லாரும்  அறந்தொழிந்தார்
பாணியா தென்னை மருந்து செய்து
பண்டுபண் டாக்க வுறுதிராகில்
மாணியுருவா யுலகளந்த
மாயனைக் காணில் தலைமறியும்
ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டிய
ஆய்ப்பாடிக் கேயென்னை யுய்த்திடுமின்

நாணி இனியோர் கருமமில்லை-  இனி வெட்கப்பட்டு ஒரு வேலையுமில்லை

நால் அலயாரும் அறந்தொழிந்தார் - (என் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே அறிந்த செய்தி) உற்றார், உறவினர் அனைவருக்கும் தெரிந்துவிட்டது

பாணியாது என்னை மருந்து செய்து - காலம் தாழ்த்தாது என் நோய்க்கு நீங்கள் மருத்துவம் பார்த்து

பண்ணு பண்டாக்க உறுதிராகில் - முன்பு எப்படியிருந்தேனோ,அதுபோல பண்டுவம் பார்க்க உறுதியுடையவராக இருப்பார்கள் எனில்

மாணியுருவா உலகளந்த - குள்ள உருவில் வந்து உலகை அளந்த

மாயனைக் காணில் தலை  மறியும் - அந்த மாயவனைக் கண்டால் இந்நோய் குணமடைந்து நான் மீள்வேன்

ஆணையால் நீர் என்னைக் காப்பீர் - என் மீது ஆணையாக நீங்கள் என்னை காக்க வேண்டுமானால்

ஆயப்பாடிக்கே என்னை உய்த்திடுமின் - ஆயர்பாடியில் என்னைக் கொண்டு சேர்த்துவிடுங்கள்

என் வீட்டார் மட்டுமே அறிந்த செய்தி, இப்போது உற்றார், உறவினர் அனைவருக்கும் தெரிந்து விட்டது.காலம் தாழ்த்தாது என் நோய்க்கு மருத்துவம் பார்த்து, என்னை பழைய நிலைக்கு வரவழைக்க வேண்டுமானால்,   குள்ள உருவில் வந்து உலகை அளந்த அந்த மாயவனை நான் காண வேண்டும்;
நீங்கள் என் மீது ஆணையாக, என்னைக் காக்க வேண்டுமானால் என்னை (அவன் இருக்கும்) ஆயர் பாடியில் கொண்டு சேர்த்து விடுங்கள்

(பண்டுவம் - மருத்துவம்)

No comments:

Post a Comment