Wednesday, March 21, 2018

135 - அனுங்க வென்னைப் பிரிவுசெய்

அனுங்க வென்னைப் பிரிவுசெய்
தாயர் பாடி கவந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக்
கோவர்த் தன்னைக் கண்டீரே
கணங்க ளோடு மின்மேகம்
கலந்தாற் போல வனமாலை
மினுங்க நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே

அனுங்க என்னைப் பிரிவிசெய்தாய் - என்னை வருந்த என்னை பிரிவு செய்து

ஆயர்பாடி கவந்துண்ணும் - ஆயர்பாடி மக்களைக் கவர்ந்து உண்ணும்

குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தன்னைக் கண்டீரே - வெண்ணெய் மணம் கொண்டவன் , குட்டைக்காளை கோவர்த்தனனைக் கண்டீர்களா?

கணங்களோடு மின் மேகம் கலந்தாற்போல _ தன் நண்பர் கூட்டத்தோடு , மின்னும் மேகம் கலந்தாற்போல

வனமாலை மினுங்க நின்று விளையாட - கருத்த தேகத்தில் பல பூக்கள் கலந்த மாலைகள் மினுங்க அங்கு நின்று விளையாடிய (வனை)

விருந்தா வனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் பார்த்தோமே

கேள்வி - என்னை வருத்தமடைய வைத்து, பிரிந்த, ஆயர்பாடி மக்களைக் கவர்ந்து உண்ணும், வெண்ணெய் மணம் கொண்ட குட்டைக்காலை கோவர்த்தனனைக் கண்டீர்களா?

பதில் - தன் நண்பர் கூட்டத்தோடு, மின்னும் மேகம் கலந்தாற்போல, கருத்த தேகத்தில் பலநிற பூக்கள் கலந்த மாலைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தவனை விருந்தாவனத்திலே கண்டோமே

No comments:

Post a Comment