Saturday, March 3, 2018

68-உன்னோடு டனையொரு கடல் வாழ்வாரை

உன்னோடு டனையொரு கடல் வழ்வாரை
இன்னாரி னையாரென் றெண்ணுவா ரில்லைகாண்
மன்னாகி நின்றம துசூதன் வாயமுதம் பன்னாளு
முண்கின்றாய் பாஞ்சசன்னியமே

உன்னோடு உடனை ஒரு கடல் வாழ்வாரை- உன்னுடன் கூடவே பிறந்த ஒரே கடலில் வாழ்பவர்களை
இன்னார் இனையார் என்றெண்ணுவா ரில்லை காண்-இன்னார் என அ டையாளம் கண்டு மதிக்க எவரும் நினைப்பதில்லை என்பதைப் பார்

மண்ணாகி நின்ற மதுசூதன் வாய் அமுதம் பன்னாளு-எந்நாளும் நிலைத்து நிற்கும் மதுசூதன் வாய் எச்சில் எனும் அமுதம்
உண்கின்றாய் பாஞ்சசன்னியமே-நீ ஒருவன் மட்டுமே உண்ணுகிறாய் சங்கே!

உன்னுடனேயே, கடலில் பிறந்து வாழ்பவர்களையெல்லாம், இன்னார் என தனித்தனியே அடையாளம் கண்டு மதிக்க யாரும் எண்ணுவதில்லை.ஆனால் நீ மட்டுமே எந்நாளும் நிலைத்து புகழ் பெற்ற மதுசூதன் திருவாய் அமுதம் உண்ணும் பேறு பெற்றாய்  

No comments:

Post a Comment