Sunday, March 11, 2018

99- கணமா மயில்காள்

கணமா மயில்காள் கண்ணபி
ராந்திருக் கோலம் போன்று
அணிமா நடம்பயின் றாடுகின்
றீர்க்கடி வீழ்கின்றேன்
பணமா டரவணைப் பற்பல
காலமும் பள்ளிகொள்
மணவாளர் நம்மை வைத்த
பரிசிது காண்மினே

கணமா மயில்காள் கண்ணபிரான் திருக்கோலம் போன்று- திரண்டு இருக்கும் பெரும் மயில்களே!கண்னபிரான் திருக்கோலம் போன்று இருக்கறீர்கள்
(கண்ணனின் நிறம் நீலம்.மயில்களும் நீல நிறம்)

அணிமா நடம் பயின்றாடுகின்றீர் அடி வீழ்கின்றேன்- அழகாக நடனம் ஆடுகின்ற (உங்கள்) பாதங்களில் வீழ்கின்றேன்

பணமாடு அரவணைப் பற்பல காலமும் பள்ளிகொள் மணவாளர்- படம் எடுத்து ஆடும் பாம்பினைப் பலகாலமாக படுக்கையாக்கித் தூங்கும் என் மணவாளன்

நம்மை வைத்த பரிசு இது காண்மினே-எனக்குக் கொடுத்த வாழ்வு (உங்கள் பாதத்தில் வீழ்ந்ததுதான்)இதுதான் பார்த்து கொள்ளுங்கள்

கூட்டமாய் உலவும் மயில்களே! நீங்கள் கண்ணபிரான் நிறத்தில் உள்ளீர்கள்.நான் அவனை மறந்து இங்கே வந்தால், நீங்கள் அவனை ஞாபகப்படுத்துகிறீர்கள்.என் மனம் உங்களுக்குப் புரியவில்லை.நீங்கள் ஆடும் நடனத்தை நிறு  த்து ங்கள் என உங்கள்  பாதங்களில் விழுகின்றேன்.படம் எடுத்து ஆடும் பாம்பினில் சயனம் கொண்டுள்ள என் மணவாளர் என்னை எப்படியெல்லாம் வாட்டுகிறார் பாருங்கள்.அவர் எனக்கு துன்பத்தையே பரிசாகக் கொடுத்துவருகிறார்.உங்கள் பாதங்களில் விழ வைத்துவிட்டார்.அவரையே எண்ணியுள்ள எனக்கு இது நல்ல பரிசு.

No comments:

Post a Comment