Wednesday, March 7, 2018

83- நாகத்தினணையானை நன்னுதலாள் நயந்துரைசெய்

நாகத்தின ணையானை நன்னுதலாள் நயந்துரைசெய்
மேகத்தை வேங்கடக்கோன் விடுதூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதைதமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவரடியா ராகுவரே

நாகத்தினைணையானை நன்னுதலாள் நயந்துரைசெய்- நாகத்தினை படுக்கையாக்கிப் படுத்தவனை, அழகிய நெற்றியை உடைய பெண் நயந்து உரை செய்த

மேகத்தை வேங்கடக்கோன் விடுதூதில் விண்ணப்பம்- திருவேங்கட அரசனுக்கு மேகத்தைத் தூதுவிட்டு விண்ணப்பம் செய்த

போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதைதமிழ்-ஒழுக்கத்தில் தவறாத வில்லிபுத்தூர் தலைவன் பெரியாழ்வார் மகள் கோதை தமிழ்ப் பாடல்களை

ஆகத்து வைத்துரைப்பார் அவரடியார் ஆகுவரே-தங்கள் மனதிலே வைத்து உரைப்பவர்கள் பெருமாளின் அடியவர்கள் ஆவார்கள்

நாகத்தை அணைத்துக் கிடப்பவனே, அழகிய நெற்றியை உடையப் பெண் நயந்து உரை செய்த,மேகத்தை விட்டு, வேங்கட அரசனுக்கு தூது விட்டு விண்ணப்பம் செய்தவளுமான, வழுவாத நெறியையுடைய, வில்லிப்புத்தூர் தலைவர் பெரியாழ்வாரின் மகள் கோதை சொன்ன இந்தப்பத்துப் பாடல்களை மனதில் வைத்து உரைப்பவர்கள் பெருமாளின் அடியவர்கள் ஆவர்

(மேகம் விடு தூது எட்டாம் பத்து இத்துடன் முடிவடைந்தது)

No comments:

Post a Comment