Tuesday, March 6, 2018

78- வான் கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் வேங்கடத்து

வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் வேங்கடத்துத்
தேன் கொண்ட  மலர்ச்சிதறத் திரண்டேறிப் பொழிவீர்கள்
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தான் கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே

வான் கொ ண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள்- மழைநீரைத் தன்னகத்தேக் கொண்டு வானிலே கிளர்ந்து எழுந்த பெரும் மேகங்களே
வேங்கடத்துத் தேன் கொண்ட மலர்ச்சிதறத் திரண்டேறிப் பொழிவீர்கள்- வேங்கடத்து மலையில் உள்ள தேன் கொண்ட  மலர்கள் சிதறும் அளவிற்குத் திரண்டு ஏறிப் பொழியும் மேகங்களே
ஊங்கொண்ட வள்ளுகிரால் இரண்யனை உடல் இடந்தான்- தசையைக் கொண்ட தன் கூரிய நகங்களால் இரண்யனின் தசையைப் பிளந்தவன்
தான் கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே-எடுத்துக் கொண்ட என் உடலின் வளைவுகளைத் திருப்பித் தருமாறு சொல்லுங்கள்

மழைநீரைத் தன்னகத்தேக் கொண்டு வானிலே கிளர்ந்து எழுந்த பெரும் மேகங்களே! வேங்கடத்து மலையில் உள்ள தேன் கொண்ட மலர்கள் சிதறும் அளவிற்குத் திரண்டு ஏறிப் பொழியும் மேகங்களே (மிகவும் மெல்லியது மலர்..ஆனால்..மழைப்பெய்து அம்மலரிலுள்ள தேனைச் சிதறடிக்கும் மேகங்கள்),  தன் கூரிய நகங்களால் இரண்யனின் தசையை பிளந்த என் மன்னனின்  நினைவால் உடல் மெலிந்து,என் அங்கங்களின் ஆங்காங்கே இருக்க வேண்டிய வளைவுகள் சரிந்தன.அவற்ரைத் திருப்பித் தரச்சொல்லி அவனிடம் கூறுங்கள்

No comments:

Post a Comment