Wednesday, March 14, 2018

109 - கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார்

கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரிநீர்
செய்ப்புரள வோடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கு மெய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றாரென் மெய்ப்பொருளும் கொண்டார்

கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் - என் கையிலிருந்த அனைத்துப் பொருட்களையும் முன்னமேயே கைபற்றிக் கொண்டார்

காவிரிநீர் செய்ப்புரள வோடும் திருவரங்கச் செல்வனார் - காவிரி நீர் விளைநிலங்களில் புரண்டு ஓடும் திருவரங்கத்து செல்வனார்

எப்பொருட்கும் நின்றார்க்கு மெய்தாது நான்மறையின்- எல்லாப் பொருட்களிலும் உள் நின்று எவருக்கும் கிட்டாது நான்மறையின்

சொற்பொருளாய் நின்றாரென் மெய்ப்பொருளும் கொண்டாரே- சொற்பொருளாய் நின்றார்.அவரே என் உடலையும் கொள்ளை கொண்டாரே!

(நான் கு மறையின் உட்பொருள் "ஓம்" என்பதாகும்)

என் கையிலிருந்த அனைத்துப் பொருட்களையும் முன்னமேயே கைப்பற்றிக் கொண்ட, காவிரி புரண்டோடும் விளைநிலங்களின் செல்வனார் திருவரங்கனார், அனைத்துப் பொருட்களின் உள்ளும் இருந்து, எவருக்கும் கிட்டாத நான் கு மறையின் உட்பொருளான "ஓம்" என்றும் சொற் பொ ருளாகவும் நின்றார்.அப்படிப்பட்டவர் என் உடலையும் கொள்ளை கொண்டாரே!

No comments:

Post a Comment