Friday, March 9, 2018

92- கோங்கல ரும் பொழில்மா லிருஞ்சோலை

கோங்கலரும் பொழில்மா லிருஞ்சோலையில் கொன்றைகள்மேல்
தூங்குபொன் மாலைகளோ டுடனாய்நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் சாரங்கவில்
நாணொலியும் தலைப்பெய்வதெஞ் ஞான்று கொலோ

கோங்கலரும் பொழில்மாலிருஞ்சோலையில்- கொன்றை மரங்களின் பூக்கள் மலரும் திருமால் இருக்கும் சோலையில்

கொன்றைகள்மேல் தூங்கும் பொன் மலைகளோடு உடனாய் தூங்குகின்றேன்-கொன்றை மரங்களின் மேல் தூங்கும் பொன் நிறத்தை ஒத்த மஞ்சள்நிற மாலைகளோடு சேர்ந்து நின்று நானும் உற்ங்குகின்றேன்

பூங்கொள் திருமுகத்து மடுத்துஊதிய சங்கொலியும் சாரங்கவில்-பூவினைப் போன்ற மலர்ந்த திருமுகத்தில் உள்ள பவள வாயில் ஊதிய சங்கு ஒலியும், சாரங்க வில்லின்

நாண் ஒலியும் தலைப்பு எய்வதேஞ்ஞான்று கொலோ-நாண் ஒலியும் நான் கேட்பது எந்நாளோ?

கொன்றை மரங்களின் பூக்கள் மலரும் திருமால் இருக்கும் சோலையில், கொன்றை மரங்களின் மேல் தூங்கும் பொன் நிறத்தை ஒத்த மஞ்சள் நிற மாலைகளோடு சேர்ந்து நின்று நானும் உறங்குகின்றேன்.புவினைப் போன்ற மலர்ந்த திருமுகத்தில் உள்ள பவள வாயில் ஊதிய சங்கும், சாரங்க வில்லின் ஒலியும் நான் கேட்பது எந்நாளோ?(சங்கொலியும், நாணொலியும் கேட்டால் அவன் வருவதாகப் பொருள்.அவன் வரவு எந்ந்ளோ?என் கீராள் கோதை 

No comments:

Post a Comment