Sunday, March 11, 2018

98- பாடும் குயில்காள் ஈதென்ன

பாடும் குயில்காள் ஈதென்ன
பாடல்நல் வேங்கட
நாடார் நமக்கொரு வாழ்வுதந்
தால்வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடியுடை
யார்வந் தருள்செய்து
கூடுவ ராயிடில்  கூவிநும்
பாட்டுகள் கேட்டுமே

(குயில்காள் பாட்டு இசைக்கின்றனவாம்.அது இவளுக்கு வேதனையைத் த்ருகிறதாம்)

பாடும் குயில்காள் இதுஎன்ன பாடல்- பாடும் குயில்களே இது என்ன பாடல்(எனக்கு வேண்டாம்)

நல் வேங்கட நாடார் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் பாடுமின்- நல்ல எனக்கு நன்மை செய்யக் கூடிய திருவேங்கட நாட்டினையுடையவன், எனக்கு ஒரு வாழ்வு தந்த பிறகு வந்து பாடுங்கள்

ஆடும் கருளக் கொடி உடையார் வந்து அருள் செய்து-  பறந்திடும் கருடக் கொடியை உடையவன் வந்து எமக்கு அருள் செய்து

கூடுவராயிடில் கூவி நும் பாட்டுகள் கேட்டுமே- கூடுவாராயின், உன்னைக் குவி அழைக்கிறேன் வந்து பாடு.கேட்கிறேன்

பாடும் குயிலே! இது என்ன இப்போது பாடல்.எனக்கு வேண்டாம்.கருடனின் கொடியைக் கொண்டவன்அருள் செய்து , திருவேங்கட நாட்டினன் (திருமால்) வந்து எனக்கு வாழ்வினைத் தந்தபின் , உன்னை அழைக்கின்றேன்..வந்து பாடு.அப்போது கேட்கிறேன் என் கிறாள்.


No comments:

Post a Comment